| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2839 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) ((கூறுதல்) இத்திருவாய்மொழியைக் கற்பார் இதிற்சொன்னபடியே எம்பெருமானைப் பாரிபூர்ணமாகத் திருநாட்டிலே நித்யாநுபவம் பண்ணப்பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. 11 | கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன் கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும் கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11 | ஒன்று கூறுதல் ஆரா,Ondru kurudhal aaraa - ஒரு குணத்தைச் சொல்லுதலும் முடியாத குடக் கூத்த அம்மானை,Kudak kootha ammaanai - குடக் கூத்தாடின கண்ணபிரானைப்பற்றி கூறுதல் மேவி,Koorudhal mevi - சொல்லுவதில் ஆசை கொண்டு குருகூர்சடகோபன் கூறின,Kurugoor Sadagoban koorina - அந்தாதி அந்தாதித் தொடையான ஓர்ஆயிரத்துள்,Oraayiraththul - ஆயிரம் பாசுரத்தினுள்ளே இப்பத்தும்,Ippaththum - இத்திருவாய்மொழியை கூறுதல் வல்லார்,Koorudhal vallaar - ஓத வல்லவர்கள் உளர் ஏல்,Ular yel - உண்டாகில்(அவர்) வைகுந்தம் கூடுவர்,Vaigundam kooduvar - பரமபதம் சேரப்பெறுவர் |