Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2839 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2839திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) ((கூறுதல்) இத்திருவாய்மொழியைக் கற்பார் இதிற்சொன்னபடியே எம்பெருமானைப் பாரிபூர்ணமாகத் திருநாட்டிலே நித்யாநுபவம் பண்ணப்பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. 11
கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11
ஒன்று கூறுதல் ஆரா,Ondru kurudhal aaraa - ஒரு குணத்தைச் சொல்லுதலும் முடியாத
குடக் கூத்த அம்மானை,Kudak kootha ammaanai - குடக் கூத்தாடின கண்ணபிரானைப்பற்றி
கூறுதல் மேவி,Koorudhal mevi - சொல்லுவதில் ஆசை கொண்டு
குருகூர்சடகோபன் கூறின,Kurugoor Sadagoban koorina - அந்தாதி அந்தாதித் தொடையான
ஓர்ஆயிரத்துள்,Oraayiraththul - ஆயிரம் பாசுரத்தினுள்ளே
இப்பத்தும்,Ippaththum - இத்திருவாய்மொழியை
கூறுதல் வல்லார்,Koorudhal vallaar - ஓத வல்லவர்கள்
உளர் ஏல்,Ular yel - உண்டாகில்(அவர்)
வைகுந்தம் கூடுவர்,Vaigundam kooduvar - பரமபதம் சேரப்பெறுவர்