| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2840 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -2-6-1- இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அவன் அதி சங்கை பண்ண -அத்தை நிவர்த்திப்பிக்கிறார்.) 1 | வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1 | வைகுந்தா,Vaikundha - பரமபத நாதனே மணி வண்ணனே,Mani Vannane - நீல மணி போன்ற வடிவை யுடையவனே என் பொல்லாத் திருக் குறளா,En Pollath Thiruk Kurala - என்னுடைய அனுபவத்திற்கு உரிய அழகிய வாமன மூர்த்தியே என் உள் ,En Ul - என் மனதில் மன்னி வைகும்,Manni Vaigum - நிலை பெற்று தங்கி இருப்பவனும் வைகல் தோறும்,Vaigal Thorum - ஒவ்வொரு க்ஷணத்திலும் அமுது ஆய ,Amuthu Aaya - அம்ருதமாயிருபவனும் மான வான் ஏறே ,Vaan yere - நித்யஸூரி நாதனே! செய்,Sei - செய்யப்பட்டு குந்தா,Gundha - குறைபடாத அரு தீமை ,Aru Theemai - போக்குதற்கரிய பாவங்களை உன் அடியார்க்குத் தீர்த்து,Un Adiyarkuth Theerthu - உன் தொண்டர்கட்கு போக்கி அசுரர்க்கு,Asurarkku - அஸுரப்ரக்ருதிகளுக்கு தீமைகள்,Theemaigal - அந்த தீமைகளை செய்,Sei - உண்டாக்குகின்ற குந்தா,Gundha - பரிசுத்தனே உன்னை,Unnai - எப்படிப்பதை உன்னை நான்,Naan - அடியேன் சிக்கென,Sikken - உறுதியாக பிடித்தேன்,Pidithen - பிடித்துக்கொண்டவன்(என்று) கொள்,Kol - திருவுள்ளம் பற்ற வேணும் |