| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2841 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (எம்பெருமான் ஆழ்வார்தம்மோடே கலந்து மிக்க ஒளிபெற்றானாய்க் கொண்டு வேறு போக்கிடமற்றுத் தம் பக்கலிலேயே படுகாடு கிடச்சிறபடியைப் பேசுகிறார்.) 2 | சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2 | சிறிது ஓர்இடமும்,Siridhu Ooridamum - மிக அற்பமான இடமும் புறப்படா,Purappada - வெளிப்பட்டிராமல் (எல்லாம் உள்ளே யடங்கும்படி) உலகுகள்,Ulakul - உலகங்களை தன் உள்,Than Ul - தனக்குள்ளே ஒக்க,Okka - சமமாக விழுங்கி,Vilungi - அமுது செய்து (அந்தத் திருக்கோலத்துடனே) சிக்கென,Sikkena - உறுதியாக புகுந்தான்,Pugundhaan - என்னுள் பிரவேசித்தான் புகுந்ததன்பின்,Pugundhadhanpin - பிரவேசித்தபின் மிக்க,Mikka - மிகுந்த ஞானம் வெள்ளம்,Gnaanam Vellam - ஞானப் பிரவாஹமாகிற சுடர்,Sudar - ஒளியுள்ள விளக்கு ஆய்,Vilakku Aay - தீபமாகி துளக்கு அற்று,Thulakku Attru - (நான் ஒருகால் விட்டுவிடுவேனோ என்கிற) ஸந்தேஹம் தீர்ந்து அமுதம் ஆய்,Amudham Aay - அம்ருதமாகி என்,En - எனக்கு விதேயனான பைந் தாமரை கண்ணன்,Pain Thaamarai Kannan - அழகிய தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடைய பெருமான் எங்கும்,Engum - எவ்விடத்திலும் பக்கம் நோக்க அறியான்,Pakkam Nokka Ariyaan - திரும்பிப் பார்ப்பது மின்றியே யிராநின்றான் |