Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2841 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2841திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (எம்பெருமான் ஆழ்வார்தம்மோடே கலந்து மிக்க ஒளிபெற்றானாய்க் கொண்டு வேறு போக்கிடமற்றுத் தம் பக்கலிலேயே படுகாடு கிடச்சிறபடியைப் பேசுகிறார்.) 2
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2
சிறிது ஓர்இடமும்,Siridhu Ooridamum - மிக அற்பமான இடமும்
புறப்படா,Purappada - வெளிப்பட்டிராமல் (எல்லாம் உள்ளே யடங்கும்படி)
உலகுகள்,Ulakul - உலகங்களை
தன் உள்,Than Ul - தனக்குள்ளே
ஒக்க,Okka - சமமாக
விழுங்கி,Vilungi - அமுது செய்து (அந்தத் திருக்கோலத்துடனே)
சிக்கென,Sikkena - உறுதியாக
புகுந்தான்,Pugundhaan - என்னுள் பிரவேசித்தான்
புகுந்ததன்பின்,Pugundhadhanpin - பிரவேசித்தபின்
மிக்க,Mikka - மிகுந்த
ஞானம் வெள்ளம்,Gnaanam Vellam - ஞானப் பிரவாஹமாகிற
சுடர்,Sudar - ஒளியுள்ள
விளக்கு ஆய்,Vilakku Aay - தீபமாகி
துளக்கு அற்று,Thulakku Attru - (நான் ஒருகால் விட்டுவிடுவேனோ என்கிற) ஸந்தேஹம் தீர்ந்து
அமுதம் ஆய்,Amudham Aay - அம்ருதமாகி
என்,En - எனக்கு விதேயனான
பைந் தாமரை கண்ணன்,Pain Thaamarai Kannan - அழகிய தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடைய பெருமான்
எங்கும்,Engum - எவ்விடத்திலும்
பக்கம் நோக்க அறியான்,Pakkam Nokka Ariyaan - திரும்பிப் பார்ப்பது மின்றியே யிராநின்றான்