| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2844 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) ( நித்ய கைங்கர்யத்திலே ஊன்றியிருக்குமடியேன் உன்னை விடுவதற்கு ப்ரஸக்தி லேசமு மில்லை யென்று மீளவும் வற்புறுத்திப்பேசுகிறார்.) 5 | உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5 | பால் கடல்,Paal Kadal - திருப்பாற்கடலிலே ஐந்து,Aindhu - ஐந்தாகிய பைந்தலை,Painthalai - படங்களோடு கூடிய சிரங்களையுடையவனாய் ஆடு,Aadu - ஆடுகின்ற அரவு,Aravu - ஆதிசேஷனாகிற அணை,Anai - சயனத்தின் மீது யோக நித்திரை,Yoga Nithirai - யோகநித்ரையிலே மேவி,Mevi - பொருந்தி சிந்தை செய்த,Sinthai Seydha - லோக ரக்ஷண சிந்தனை பண்ணின எந்தாய்,Endhaai - என் ஸ்வாமியே! உன்னை,Unnai - உன்னை சித்தை செய்து செய்து,Sithai Seydhu Seydhu - நிரந்தரமாகச் சிந்தித்து உய்ந்து,Uyndhu - உஜ்ஜீவனம் பெற்று உலப்பு இலாத,Ulpup Illaadha - முடிவில்லாத வெம்,Vem - கொடிய என் தீவினைகளை,En Theevinai Kalai - எனது பாபங்களை நாசம் செய்து,Naasam Seydhu - தொலைத்து உனது,Unadhu - உன்னுடைய அந்தம் இல்,Antham Il - முடிவில்லாத அடிமை,Adimai - கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தை அடைந்தேன்,Adaindhen - அடைந்தவனான நான் விடுவேனோ,Viduvaeno - இனிவிட்டு நீங்குவேனோ? |