| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2845 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) ( ஆழ்வாரே! உமக்கு நான் இனிச் செய்யவேண்டுவதென்ன?’ என்று எம்பெருமான் கேட்க, ‘நான் பெறாததுண்டோ? எல்லாம் பெற்றேனே; இனிச் செய்ய வேண்டுவதொன்றுமில்லை காண்’ என்கிறார். ஆச்ரிதன் ப்ரதிஜ்ஞை பண்ணின ஸமயத்திலே வந்து தோன்றுமியல்வினனாக நீ யிருக்கும்போது, எனக்கு என்ன குறையென்கிறார்.) 6 | உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான் உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என் முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6 | உன்னை,Unnai - உன்னை சிந்தையினால்,Sinthaiyinaal - நெஞ்சாலே இகழ்ந்த,Igazhndha - அநாதரித்த இரணியன்,Iraniyan - ஹிரண்யகசிபுவினுடைய அகல் மார்வம் கீண்ட,Akal Maarvam Keenda - அகன்ற மார்வைக் கிழித்தவனும் என்,En - எனக்கு அநுபவிக்க வுரியவனும் முன்னை,Munnaai - அநாதி ஸித்தனுமான கோள் அரியே,Kol Ariye - மிடுக்குடைய நரசிங்க மூர்த்தியே! உன்னை சிந்தை செய்து செய்து,Unnai Sinthai Seydhu Seydhu - உன்னை இடையறாது சிந்தித்து நெடு,Netu - உயர்ந்த உன் மா மொழி,Un Ma Mozhi - உன்னைப்பற்றின திருவாய் மொழியை இசை பாடி,Isai Paadi - இசையுடனே பாடி ஆடி,Aadi - (ஆனந்தத்திற்குப் போக்கு வீடாக) ஆடி என் முன்னை தீ வினைகள்,En Munnaai Thee Vinaigal - எனது தொல்லைப் பாபங்களை யான்,Yaan - நான் முழுவேர் அரிந்தனன்,Muzhuver Arinthaan - முழுதும் வேரோடு அறுத்தொழித்தேன்; எனக்கு,Enakku - அடியேனுக்கு முடியாதது என்,Mudiyadathu En - (இனி) அஸாத்தியமான துண்டோ? |