| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2846 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (கீழ்ப்பாட்டில் “முடியாததென் எனக்கே” என்றார்; எல்லாம் பெற்றுவிட்டீரோ? என்று அன்பர் கேட்க, என்னிடத்து எம்பெருமான் பண்ணின விசேஷ கடாக்ஷத்தாலே, என்னோடு ஸம்பந்த ஸம்பந்திகளானவர்களுங்கூட உஜ்ஜ்விக்கப் பெற்றார்களே! இன்னமும் நான் பெறவேண்டியது என்ன இருக்கிறது என்கிறார்.) 7 | முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7 | முழு ஏழ் உலகும் உண்டான்,Muzhu Yezh Ulakum Undaan - ஏழுலகங்களையும் முற்ற அமுது செய்து (பிரளயங்கொள்ளாதபடி காத்தருளின பெருமான் உகந்து,Ukanthu - விரும்பி அடியேன் உள் வந்து புகுந்தான்,Adiyaen Ul Vandhu Pugundhaan - அடியேனுள்ளத்தில் வந்து புகுந்தான்; இனி அகல்வானும் அல்லன்,Ini Akalvaanum Allan - இனிமேல் (அப்பெருமான் அகன்று போகவும் மாட்டான்; கீழ் மேல் எழு பிறப்பும் எமர்,Keel Mel Yezhu Pirappum Yemar - கீழும் மேலும் ஏழ் பிறப்புக்களிலும் எம்மவர்கள் செடி ஆர்நோய்கள் எல்லாம் துரந்து,Chedi Aar Noygal Ellaam Thurandhu - பெருங்காடாகப் பரம்பின நோய்களெல்லாம் தொலையப் பெற்று என்றும்,Endrum - ஒரு நாளும் விடியா,Vidiya - ஓய்வில்லாத வெம் நரகத்து,Vem Naragathu - கொடிய ஸம்ஸார நரகத்தில் சேர்தல் மாறினர்,Seertal Maarinar - சேராமலிருக்கும்படி பெற்றார்கள்; இனி,Ini - இப்படியான பின்பு எனக்கு,Enakku - எனக்கு முடியாதது என்;,Mudiyadathu Yen; - அடையப்படாதது உண்டோ, எல்லாம் ஸித்தமே. |