Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2846 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2846திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (கீழ்ப்பாட்டில் “முடியாததென் எனக்கே” என்றார்; எல்லாம் பெற்றுவிட்டீரோ? என்று அன்பர் கேட்க, என்னிடத்து எம்பெருமான் பண்ணின விசேஷ கடாக்ஷத்தாலே, என்னோடு ஸம்பந்த ஸம்பந்திகளானவர்களுங்கூட உஜ்ஜ்விக்கப் பெற்றார்களே! இன்னமும் நான் பெறவேண்டியது என்ன இருக்கிறது என்கிறார்.) 7
முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7
முழு ஏழ் உலகும் உண்டான்,Muzhu Yezh Ulakum Undaan - ஏழுலகங்களையும் முற்ற அமுது செய்து (பிரளயங்கொள்ளாதபடி காத்தருளின பெருமான்
உகந்து,Ukanthu - விரும்பி
அடியேன் உள் வந்து புகுந்தான்,Adiyaen Ul Vandhu Pugundhaan - அடியேனுள்ளத்தில் வந்து புகுந்தான்;
இனி அகல்வானும் அல்லன்,Ini Akalvaanum Allan - இனிமேல் (அப்பெருமான் அகன்று போகவும் மாட்டான்;
கீழ் மேல் எழு பிறப்பும் எமர்,Keel Mel Yezhu Pirappum Yemar - கீழும் மேலும் ஏழ் பிறப்புக்களிலும் எம்மவர்கள்
செடி ஆர்நோய்கள் எல்லாம் துரந்து,Chedi Aar Noygal Ellaam Thurandhu - பெருங்காடாகப் பரம்பின நோய்களெல்லாம் தொலையப் பெற்று
என்றும்,Endrum - ஒரு நாளும்
விடியா,Vidiya - ஓய்வில்லாத
வெம் நரகத்து,Vem Naragathu - கொடிய ஸம்ஸார நரகத்தில்
சேர்தல் மாறினர்,Seertal Maarinar - சேராமலிருக்கும்படி பெற்றார்கள்;
இனி,Ini - இப்படியான பின்பு
எனக்கு,Enakku - எனக்கு
முடியாதது என்;,Mudiyadathu Yen; - அடையப்படாதது உண்டோ, எல்லாம் ஸித்தமே.