| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2848 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (முதலிலே உன்னை யறியாதிருந்தலெனக்கு, உன்னையும் உன்னுடைய போக்கியதையையுமறிவித்து, உன்னைவிட்டகன்று உயிராற்றமாட்டாதபடியான நிலைமையையும் விளைவித்த நீ, இனி என்னைவிட்டுப் பிரிந்துபோவது தகுதியோ வென்கிறார்.) 9 | எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம் மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9 | எந்தாய்,Endhaai - ஸ்வாமியே! தண் திருவேங்கடத்துள் நின்றாய்,Than Thiruvengadaththul Nindraai - குளிர்ந்த திருவேங்கட மலையிலே நிற்பவனே! இலங்கை செற்றாய்,Ilankai Setraai - லங்காபுரியை அழித்தவனே! மராமரம்,Maramaram - மராமரங்களினுடைய பை தாள் ஏழ்,Pai Thaal Yezh - பருத்த அடிகள் எழும் உருவ,Uruva - உருவும்படி ஒரு வாளி கோத்த வில்லா,Oru Vaali Kotha Villa - ஒரு அம்யை தொடுத்த வில்லை யுடையவனே! கொந்து ஆர்தண் அம் துழாயினாய்,Kondhu Aardhan Am Thuzhaayinaai - கொத்துக்கள் நிறைந்து குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே! எம் அமுதே,Em Amudhe - எனக்கு அமுதமர்னவனே! உன்னை என்னுள்ளே குழைத்த மைந்தா,Unnai Ennulle Kuzhaittha Maindha - என்னோடு ஒரு நீராகக் கலந்த மைந்தளே! வான் ஏறே,Vaan Erea - நித்யஸூரி நாதனே! இனி எங்கு போகின்றது,Ini Engu Poagindradhu - இனி என்னைத் தவிர உனககு வேறு போக்கிட முண்டோ? |