Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2848 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2848திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (முதலிலே உன்னை யறியாதிருந்தலெனக்கு, உன்னையும் உன்னுடைய போக்கியதையையுமறிவித்து, உன்னைவிட்டகன்று உயிராற்றமாட்டாதபடியான நிலைமையையும் விளைவித்த நீ, இனி என்னைவிட்டுப் பிரிந்துபோவது தகுதியோ வென்கிறார்.) 9
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9
எந்தாய்,Endhaai - ஸ்வாமியே!
தண் திருவேங்கடத்துள் நின்றாய்,Than Thiruvengadaththul Nindraai - குளிர்ந்த திருவேங்கட மலையிலே நிற்பவனே!
இலங்கை செற்றாய்,Ilankai Setraai - லங்காபுரியை அழித்தவனே!
மராமரம்,Maramaram - மராமரங்களினுடைய
பை தாள் ஏழ்,Pai Thaal Yezh - பருத்த அடிகள் எழும்
உருவ,Uruva - உருவும்படி
ஒரு வாளி கோத்த வில்லா,Oru Vaali Kotha Villa - ஒரு அம்யை தொடுத்த வில்லை யுடையவனே!
கொந்து ஆர்தண் அம் துழாயினாய்,Kondhu Aardhan Am Thuzhaayinaai - கொத்துக்கள் நிறைந்து குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
எம் அமுதே,Em Amudhe - எனக்கு அமுதமர்னவனே!
உன்னை என்னுள்ளே குழைத்த மைந்தா,Unnai Ennulle Kuzhaittha Maindha - என்னோடு ஒரு நீராகக் கலந்த மைந்தளே!
வான் ஏறே,Vaan Erea - நித்யஸூரி நாதனே!
இனி எங்கு போகின்றது,Ini Engu Poagindradhu - இனி என்னைத் தவிர உனககு வேறு போக்கிட முண்டோ?