Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2850 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2850திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (இப்பதிகத்தை இனிதாக அநுஸந்திக்குமவர்கள், பாகவதர் என்ற போக்கு உரியவராவர் என்று, இது கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11
கண்ணித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11
தண் அம்துழாய் கண்ணிமுடி,Than Am Thuzhai Kanni Mudhi - குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையணிந்த முடியையும்
கமலம் தடம் பெரு கண்ணனை,Kamalam Thadam Peru Kannanai - தாமரை போன்று விசாலமான நீண்ட திருக்கண்களையுடைய பெருமானுடைய
புகழ் நண்ணி,Pugazh Nanni - திருக்குணங்களை அநுபவித்து
தென் குருகூர் சடகோபன் மாறன் சொன்ன,Then Kurukoor Sadagoan Maran Sonna - தென் குருகூர் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல்,Ennil Sorvu Il - அநுஸந்தானத்தில் சோர்வு இல்லாத
அந்தாதி,Andhaadhi - அந்தாதித்தொடையான
ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து,Aayiraththul Ivaiyum Orpaththu - ஆயிரத்தினுள்ளே இப்பத்துப் பாட்டையும்
இசையொடும்,Isaiyodum - இசையோடுகூட
பண்ணில் பாட வல்லார்அவர்,Pannil Paada Vallaravaru - பண்ணில் அமைத்துப் பாட வல்லவர்கள்
கேசவன் தமர்,Kaesavan Thamar - எம்பெருமானடியாராகப் பெறுவர்ர்கள்.