திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2851 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2851திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (பின்னடிகளை முத்துற அந்வயித்துக்கொண்டு முன்னடிகளைப் பிறகு அந்வயித்துக் கொள்க. ஸர்வேச்வரனாய், அழகு நிறைந்த திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டனாய், நித்யஸூரி நாதனாய் எனக்கு ஸ்வாமியாயிருக்கின்ற நாராயணனாலே, என்னோடு ஏதேனுமொருபடி ஸம்பந்தமுடையாரெல்லாரும், கேசவன்தமர் என்னும் படியான சிறப்புப் பெற்றார்கள்; அதனாலே நம்முடைய ஸ்ரீவைஷ்ணவஸ்ரீவிலக்ஷணமாகவுள்ளது என்கிறார்.) 1
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும் மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1
பதவுரை Show / Hide
ஈசன்,Eesan - எல்லார்க்கும் ஸ்வாமியாய்
என்,En - என்னுடைய அனுபவத்திற்கு உரிய
கரு செம்கோலம் கண்ணன்,Karu Sem Kolam Kannan - சிவந்து அழகிய திருக்கண்களை நான் அநுபவிக்கும்படி செய்தவனாய்
விண்ணோர்நாயகன்,Vinnor Nayagan - நித்யஸூரிநாதனாய்
எம்பிரான்,Empiran - எனக்கு உபகாரகனாய்
எம்மான்,Emman - எனது ஸ்வாமியாய்
நாராயணனாலே,Naaraayananaale - நாராயணனாலே
எமர்,Emar - என்னைச் சேர்ந்தவர்கள்
கீழ் மேல் ஏழ் ஏழு பிறப்பும்,Keel Mel Yezh Yezhu Pirappum - கீழும் மேலுமுள்ள ஏழேழ் பிறப்புக்களிலும்
கேசவன் தமர்,Kesavan Thamar - பகவத் பக்தராகப் பெற்றார்கள்
இது,Idu - இப்படிப்பட்ட
மா சதிர்,Ma Sadir - பெரிய சிறப்பை
பெற்று,Petru - அடைந்து
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற ஆ,Nammudai Vaazhvu Vaaykinraa Aa - நமது வாழ்ச்சி வளருகிறபடி என்னே!;