| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2852 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (கீழ்ப்பாட்டில், நாராயணன் என்கிற திருநாமம் ப்ரஸ்துதாமகவே அதனுடைய அர்த்தாநுபவம் பண்ணுவதாக இப்பாசுரம் அமைகின்றது.) 2 | நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன் காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2 | நாரணன்,Naaranan - நாராயணனும் முழு எழ் உலகுக்கும்நாதன்,Muzhu Yezh Ulakukkum Naadhan - எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமியும் காரணம் கிரிசை கரமம் இவை முதல்வன்,Kaaranam Kirisai Karamam Ivai Mudhalvan - காரணப் பொருள்கள் காரியப் பொருள்கள் பிரயோஜனங்கள் ஆகிய இவற்றுக்கு நிர்வாஹகனும் சீர்அணங்கு அமரர்,Seer Anangu Amarar - சீர்மை பொருந்திய திவ்யர்களான ந்த்யஸூரிகளாலும் பிறர் பலரும்,Pirar Palarum - மற்றும் பலபேர்களாலும் தொழுது ஏத்த நின்று,Thozhudhu Aeththa Nindru - வணங்கித் துதிக்கப்பட்டு வாரணத்தை,Vaaranathai - (கம்ஸனது)யானையினுடைய மருப்பு,Maruppu - கொம்பை ஒசித்த,Ositha - முறித்த பிரான்,Piran - உபகாரகனும் என் மாதவன்,En Madhavan - எனக்கு உரியவனுமான திருமால் எந்தை,Endhai - என்னை யடிமை கொண்டவன் |