Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2852 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2852திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (கீழ்ப்பாட்டில், நாராயணன் என்கிற திருநாமம் ப்ரஸ்துதாமகவே அதனுடைய அர்த்தாநுபவம் பண்ணுவதாக இப்பாசுரம் அமைகின்றது.) 2
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2
நாரணன்,Naaranan - நாராயணனும்
முழு எழ் உலகுக்கும்நாதன்,Muzhu Yezh Ulakukkum Naadhan - எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமியும்
காரணம் கிரிசை கரமம் இவை முதல்வன்,Kaaranam Kirisai Karamam Ivai Mudhalvan - காரணப் பொருள்கள் காரியப் பொருள்கள் பிரயோஜனங்கள் ஆகிய இவற்றுக்கு நிர்வாஹகனும்
சீர்அணங்கு அமரர்,Seer Anangu Amarar - சீர்மை பொருந்திய திவ்யர்களான ந்த்யஸூரிகளாலும்
பிறர் பலரும்,Pirar Palarum - மற்றும் பலபேர்களாலும்
தொழுது ஏத்த நின்று,Thozhudhu Aeththa Nindru - வணங்கித் துதிக்கப்பட்டு
வாரணத்தை,Vaaranathai - (கம்ஸனது)யானையினுடைய
மருப்பு,Maruppu - கொம்பை
ஒசித்த,Ositha - முறித்த
பிரான்,Piran - உபகாரகனும்
என் மாதவன்,En Madhavan - எனக்கு உரியவனுமான திருமால்
எந்தை,Endhai - என்னை யடிமை கொண்டவன்