திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2852 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2852திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (கீழ்ப்பாட்டில், நாராயணன் என்கிற திருநாமம் ப்ரஸ்துதாமகவே அதனுடைய அர்த்தாநுபவம் பண்ணுவதாக இப்பாசுரம் அமைகின்றது.) 2
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன் காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2
பதவுரை Show / Hide
நாரணன்,Naaranan - நாராயணனும்
முழு எழ் உலகுக்கும்நாதன்,Muzhu Yezh Ulakukkum Naadhan - எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமியும்
காரணம் கிரிசை கரமம் இவை முதல்வன்,Kaaranam Kirisai Karamam Ivai Mudhalvan - காரணப் பொருள்கள் காரியப் பொருள்கள் பிரயோஜனங்கள் ஆகிய இவற்றுக்கு நிர்வாஹகனும்
சீர்அணங்கு அமரர்,Seer Anangu Amarar - சீர்மை பொருந்திய திவ்யர்களான ந்த்யஸூரிகளாலும்
பிறர் பலரும்,Pirar Palarum - மற்றும் பலபேர்களாலும்
தொழுது ஏத்த நின்று,Thozhudhu Aeththa Nindru - வணங்கித் துதிக்கப்பட்டு
வாரணத்தை,Vaaranathai - (கம்ஸனது)யானையினுடைய
மருப்பு,Maruppu - கொம்பை
ஒசித்த,Ositha - முறித்த
பிரான்,Piran - உபகாரகனும்
என் மாதவன்,En Madhavan - எனக்கு உரியவனுமான திருமால்
எந்தை,Endhai - என்னை யடிமை கொண்டவன்