| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2853 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (எம்பெருமான் என்னிடத்தில் இவ்வளவு கனத்த விஷயீகாரஞ் செய்வதற்கு அடியாக நான் செய்த ஸாதாநுஷ்டாநம் பெரிதாக வொன்றுமில்லை; மாதவன் என்று வெறுமனே வாயாற் சொன்னவளவையே கொண்டு என்னுடைய தீமைகளெல்லாவற்றையும் போக்கி ஆட்கொண்டானென்கிறார்.) 3 | மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம் கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3 | எம்மான் என் கோவிந்தன்,Emman En Govindhan - எனக்காகக் கண்ணனாயவதரித்த எம்பெருமான் மாதவன் என்றதே கொண்டு,Madhavan Endrathe Kondhu - ‘மாதவன்’ என்று நான் வாயினாற் சொன்ன வளவையே கொண்டு என்னை,Ennai - என் விஷயத்தில் இனி இப்பால் பட்டது,Ini Ippaal Pattadhu - இனிமேலுள்ள காலமெல்லாம் அவங்கள் யாதும்,Avangal Yaadhum - ஒருவிதமான குறையும் சேர்கொடேன் என்று,Serkoden Endru - சேரவொட்டேள் என்று ஸங்கல்பித்துக்கொண்டு என் உள் புகுந்து இருந்து,En Ul Pugundhu Irundhu - என்னுள்ளே பிரவேசித்திருந்து தீது அவம் கெடுக்கும்,Theedhu Avam Kedukkum - பலவகைப் பாவங்களையும் போக்கி யருள்கினாய் செம் தாமரை கண்,Sem Thaamarai Kan - செந்தாமரை போன்ற திருக் கண்களையுடையனாய் குன்றம்,Kunram - குன்றம் போல் நிலைபெயராமலிருந்து கோது அவம் இல் என் கன்னல் கட்டி,Godhu Avam Il En Kannal Katti - கோதும் அவமுமில்லாத கன்னல் கட்டிபோலே எனக்கு இனியனாயிருக்கின்றான். |