Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2853 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2853திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (எம்பெருமான் என்னிடத்தில் இவ்வளவு கனத்த விஷயீகாரஞ் செய்வதற்கு அடியாக நான் செய்த ஸாதாநுஷ்டாநம் பெரிதாக வொன்றுமில்லை; மாதவன் என்று வெறுமனே வாயாற் சொன்னவளவையே கொண்டு என்னுடைய தீமைகளெல்லாவற்றையும் போக்கி ஆட்கொண்டானென்கிறார்.) 3
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3
எம்மான் என் கோவிந்தன்,Emman En Govindhan - எனக்காகக் கண்ணனாயவதரித்த எம்பெருமான்
மாதவன் என்றதே கொண்டு,Madhavan Endrathe Kondhu - ‘மாதவன்’ என்று நான் வாயினாற் சொன்ன வளவையே கொண்டு
என்னை,Ennai - என் விஷயத்தில்
இனி இப்பால் பட்டது,Ini Ippaal Pattadhu - இனிமேலுள்ள காலமெல்லாம்
அவங்கள் யாதும்,Avangal Yaadhum - ஒருவிதமான குறையும்
சேர்கொடேன் என்று,Serkoden Endru - சேரவொட்டேள் என்று ஸங்கல்பித்துக்கொண்டு
என் உள் புகுந்து இருந்து,En Ul Pugundhu Irundhu - என்னுள்ளே பிரவேசித்திருந்து
தீது அவம் கெடுக்கும்,Theedhu Avam Kedukkum - பலவகைப் பாவங்களையும் போக்கி யருள்கினாய்
செம் தாமரை கண்,Sem Thaamarai Kan - செந்தாமரை போன்ற திருக் கண்களையுடையனாய்
குன்றம்,Kunram - குன்றம் போல் நிலைபெயராமலிருந்து
கோது அவம் இல் என் கன்னல் கட்டி,Godhu Avam Il En Kannal Katti - கோதும் அவமுமில்லாத கன்னல் கட்டிபோலே எனக்கு இனியனாயிருக்கின்றான்.