Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2854 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2854திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (என்னை மாத்திரமன்றியே என்னோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரையுங்கூட என்னைப்போலே யாக்கின எம்பெருமானுடைய ஸாமாத்தியம் என்னே! என்று வியந்து பேசும் பாசுரமிது.) 4
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4
வல்லன்,Vallan - ஸர்வகக்தனும்
எம்பிரான்,Empiran - எமக்கு உபகாரங்கள் செய்பவனுமான
விட்டு,Vittu - விஷ்ணுபகவான் (எமக்குச் செய்ததுயாதெனில்)
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து,Govindhan Kudakoothan Kovalan Endru Endrae Kunithu - கோவிந்தன் என்றும் குடக் கூத்தாடுபவன்; என்றும் கோவலன் என்றும் இத்தகைய திருநாமங்களையே சொல்லிக் கூத்தாடி
தேவும்,Thevum - பரத்வத்தையும்
தன்னையும்,Thannaiyum - தானான தன்மையாகிய ஸௌலப்யத்தையும்
பாடி,Paadi - புகழ்ந்துபாடி
ஆட,Aada - திரியும்படி
திருத்தி,Thiruththi - கடாக்ஷத்து
கொண்டு,Kondu - அடியேனை
என் பாவம் தன்னையும்,En Paavam Thannaiyum - எனது பாவங்களையும்
பாற கைத்து,Paara Kaithu - ஓடவடித்து
எமர் ஏழ் எழு பிறப்பும்,Emar Yezh Yezhu Pirappum - எம்மைச் சேர்ந்தவர்கள் ஏழேழ் பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான்,Mevum Thanmaiyam Aakinaan - (தன்னை) அடையும்படியான தன்மையை யுடையோமாம்படி செய்தான்.