| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2854 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (என்னை மாத்திரமன்றியே என்னோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரையுங்கூட என்னைப்போலே யாக்கின எம்பெருமானுடைய ஸாமாத்தியம் என்னே! என்று வியந்து பேசும் பாசுரமிது.) 4 | கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4 | வல்லன்,Vallan - ஸர்வகக்தனும் எம்பிரான்,Empiran - எமக்கு உபகாரங்கள் செய்பவனுமான விட்டு,Vittu - விஷ்ணுபகவான் (எமக்குச் செய்ததுயாதெனில்) கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து,Govindhan Kudakoothan Kovalan Endru Endrae Kunithu - கோவிந்தன் என்றும் குடக் கூத்தாடுபவன்; என்றும் கோவலன் என்றும் இத்தகைய திருநாமங்களையே சொல்லிக் கூத்தாடி தேவும்,Thevum - பரத்வத்தையும் தன்னையும்,Thannaiyum - தானான தன்மையாகிய ஸௌலப்யத்தையும் பாடி,Paadi - புகழ்ந்துபாடி ஆட,Aada - திரியும்படி திருத்தி,Thiruththi - கடாக்ஷத்து கொண்டு,Kondu - அடியேனை என் பாவம் தன்னையும்,En Paavam Thannaiyum - எனது பாவங்களையும் பாற கைத்து,Paara Kaithu - ஓடவடித்து எமர் ஏழ் எழு பிறப்பும்,Emar Yezh Yezhu Pirappum - எம்மைச் சேர்ந்தவர்கள் ஏழேழ் பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்,Mevum Thanmaiyam Aakinaan - (தன்னை) அடையும்படியான தன்மையை யுடையோமாம்படி செய்தான். |