Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2856 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2856திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (எம்பெருமான் பக்கலிலே நான் ஊன்றுகைக்காக அவன்றான் நெடுங்காலம் க்ருஷி பண்ணினதுண்டு அதுவும் பரமக்கிருபையாலே யென்கிறார்.) 6
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6
மது சூதனை அன்றி,Madhusudhananai Andri - மதுவை முடித்த எம்பெருமானைத்தவிர
மற்று இலேன் என்று,Matru Ilaindru Endru - வேறொரு பற்றுடையேனல்லேன் என்று அநுஸந்தித்து
எத்தாலும்,Ethaalum - எந்தவஸ்துவினாலும்
கருமம் இன்றி,Karumam Indri - ஒரு காரியமில்லாமல் (அநந்யப்ரயோஜநமாக)
சூழ்ந்த,Soozhnda - அவனது திருக்குணங்களை வளைந்த
பாடல்கள்,Padalgal - பாசுரங்களை
நின்று பாடி ஆட,Nindru Paadi Aada - நிலை நின்று பாடியாடும்படி
ஊழி ஊழி தொறும்,Oozhi Oozhi Thorum - ஸதாகாலமும்
எனைத்து ஓர்பிறப்பும்,Enaithu Orpirappum - (நான் பிறந்த) எல்லாப் பிறவிகள் தோறும்
எதிர்,Edhir - எனக்கெதிரே
சூழல் புக்கு எனக்கே,Soozhal Pukku Enakke - சூழ்ச்சியோடே அவதாரித்து என்பொருட்டே
அருள்கள் செய்ய,Arulkal Seyya - க்ருபை பண்ணுதற்கு
எனக்கு ஏல்,Enakku Ael - எனக்கென்னலே
அம்மான் திரி விக்கிரமனை விதி சூழ்ந்துத,Ammaan Thiri Vikkiramanaai Vithi Soozhnthudh - ஸ்வாமியான த்ரிவிக்ரமனை விதி சூழ்ந்து கொண்டது