| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2856 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (எம்பெருமான் பக்கலிலே நான் ஊன்றுகைக்காக அவன்றான் நெடுங்காலம் க்ருஷி பண்ணினதுண்டு அதுவும் பரமக்கிருபையாலே யென்கிறார்.) 6 | மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும் எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6 | மது சூதனை அன்றி,Madhusudhananai Andri - மதுவை முடித்த எம்பெருமானைத்தவிர மற்று இலேன் என்று,Matru Ilaindru Endru - வேறொரு பற்றுடையேனல்லேன் என்று அநுஸந்தித்து எத்தாலும்,Ethaalum - எந்தவஸ்துவினாலும் கருமம் இன்றி,Karumam Indri - ஒரு காரியமில்லாமல் (அநந்யப்ரயோஜநமாக) சூழ்ந்த,Soozhnda - அவனது திருக்குணங்களை வளைந்த பாடல்கள்,Padalgal - பாசுரங்களை நின்று பாடி ஆட,Nindru Paadi Aada - நிலை நின்று பாடியாடும்படி ஊழி ஊழி தொறும்,Oozhi Oozhi Thorum - ஸதாகாலமும் எனைத்து ஓர்பிறப்பும்,Enaithu Orpirappum - (நான் பிறந்த) எல்லாப் பிறவிகள் தோறும் எதிர்,Edhir - எனக்கெதிரே சூழல் புக்கு எனக்கே,Soozhal Pukku Enakke - சூழ்ச்சியோடே அவதாரித்து என்பொருட்டே அருள்கள் செய்ய,Arulkal Seyya - க்ருபை பண்ணுதற்கு எனக்கு ஏல்,Enakku Ael - எனக்கென்னலே அம்மான் திரி விக்கிரமனை விதி சூழ்ந்துத,Ammaan Thiri Vikkiramanaai Vithi Soozhnthudh - ஸ்வாமியான த்ரிவிக்ரமனை விதி சூழ்ந்து கொண்டது |