Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2858 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2858திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (தம் விஷயத்தில் எம்பெருமான் பண்ணிந மஹோபகாரத்திற்கு இன்னது கைம்மாறு செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றமையைத் தெரிவிக்கும் பாசுரமிது, அவன் செய்த உபகாரம் யாதெனில், தன்னை யநுபவிப்பதற்கு உறுப்பாகாமலிருந்த நெஞ்சை மாற்றிப் பதஞ்செய்வித்த விதுவே மஹோபகார மென்கிறார்.) 8
வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8
என் சிரீதரனே,En Sreedharane - எனது திருமாலே!
வாமனன் என்று,Vaamanan Endru - வாமன மூர்த்தியே யென்று சொல்லியும்
என் மரதகம் வண்ணன் என்று,En Maradhagam Vannan Endru - மரதகம் போன்ற வொளியையுடைய எம்பெருமானேயென்று சொல்லியும்
தாமரைக் கண்ணினன் என்று,Thaamarai Kanninan Endru - புண்டாரிகாக்ஷனே யென்று சொல்லியும்
காமனை பயந்தாய் என்று,Kaamanai Payanthai Endru - மன்மதனை மகனாகப் பெற்றவனே யென்று சொல்லியும்.
உன் கழல்,Un Kazhal - உன் திருவடிகளில்
பாடி பணிந்து,Paadi Panindhu - பாடிவணங்கி
தூ மனத்தனன் ஆய்,Thoo Manathanaan Aay - பரிசுத்தமான மனத்தையுடையேனாய்
பிறவி துழதி நீங்க,Piravi Thuzhadi Neenga - பிறவித் துயரம் தீரும் படியாக
என்னை தீ மனம் கெடுத்தாய்,Ennai Thee Manam Keduthaai - என்னைத் தீய மனம் அற்றவனாக ஆக்கினாய்;
உனக்கு,Unakku - இப்பெரு நன்றி செய்தவுனக்கு
என் செய்கேன்,En Seykaen - என்ன கைம்மாறு செய்வேன்?