Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2859 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2859திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (கீழ் ஆடியாடி யென்கிற நான்காந் திருவாய்மொழியில் நான்பட்ட துயரமெல்லாம் தொலைந்து மகிழ்ந்தேனாம்படி என்னுள்ளே வந்து பேராதபடி புகுந்தருளி என்னுடைய இந்திரியங்களை அடக்கி ஆண்டனையே! என்று உகக்கிறார்.) 9
சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9
என் இருடீகேசனே,En IrudiKesane - அம்பெருமானான ஹ் ரு ஷீ கேசனே!
சிரீ இதரன் என்று,Sreedharan Endru - ஸ்ரீதரனே! என்றும்
செய்ய தாமரை கண்ணன் என்று,Seyya Thaamarai Kanni Nan Endru - செந்தாமரைக் கண்ணனே! என்றும்
இரா பகல்,Ira pagal - இரவும் பகலும்
வாய் வொரி இ,Vaai Vori e - வாய் பிதற்றி
அலமந்து,Alamandhu - சுழன்று
கண்கள் நீர்மல்கி,Kangal Neermalgi - கண்களில் நீர்ததும்பப் பெற்று
வெம் உயிர்த்து உயிர்த்து,Vem Uyiruthu Uyiruthu - வெப்பமாக நெடுமூச் செறிந்து
மாரி இய தீவினை மாள,Maari Iya Theevinai Maala - சேர்ந்திருக்கின்ற பாவங்கள் தொலையும்படியாகவும்
இன்பம் வளர,Inbam Valara - ஆனந்தம் பெருகும்படியாகவும்
வைகல் வைகல்,Vaigal Vaigal - ஷணந்தோறும்
உன்னை,Unnai - உன்னை
என் உள்,En Ul - என் நெஞ்கினுள்ளே
இரி இவைத் தனை,Iri Ivaith Thanai - இருத்தி வைத்தாய்; (இப்படியும் ஒரு உபகாரமுண்டோ!)