| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2859 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (கீழ் ஆடியாடி யென்கிற நான்காந் திருவாய்மொழியில் நான்பட்ட துயரமெல்லாம் தொலைந்து மகிழ்ந்தேனாம்படி என்னுள்ளே வந்து பேராதபடி புகுந்தருளி என்னுடைய இந்திரியங்களை அடக்கி ஆண்டனையே! என்று உகக்கிறார்.) 9 | சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9 | என் இருடீகேசனே,En IrudiKesane - அம்பெருமானான ஹ் ரு ஷீ கேசனே! சிரீ இதரன் என்று,Sreedharan Endru - ஸ்ரீதரனே! என்றும் செய்ய தாமரை கண்ணன் என்று,Seyya Thaamarai Kanni Nan Endru - செந்தாமரைக் கண்ணனே! என்றும் இரா பகல்,Ira pagal - இரவும் பகலும் வாய் வொரி இ,Vaai Vori e - வாய் பிதற்றி அலமந்து,Alamandhu - சுழன்று கண்கள் நீர்மல்கி,Kangal Neermalgi - கண்களில் நீர்ததும்பப் பெற்று வெம் உயிர்த்து உயிர்த்து,Vem Uyiruthu Uyiruthu - வெப்பமாக நெடுமூச் செறிந்து மாரி இய தீவினை மாள,Maari Iya Theevinai Maala - சேர்ந்திருக்கின்ற பாவங்கள் தொலையும்படியாகவும் இன்பம் வளர,Inbam Valara - ஆனந்தம் பெருகும்படியாகவும் வைகல் வைகல்,Vaigal Vaigal - ஷணந்தோறும் உன்னை,Unnai - உன்னை என் உள்,En Ul - என் நெஞ்கினுள்ளே இரி இவைத் தனை,Iri Ivaith Thanai - இருத்தி வைத்தாய்; (இப்படியும் ஒரு உபகாரமுண்டோ!) |