Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2861 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2861திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (மிகவும் விலக்ஷணனாய் மிகவும் எளியனாய் என்னை யடிமை கொண்ட எம்பெருமான், என்னைத் தவிர வேறொன்றையும் அறியாத படியானான், என்கிறார்) 11
பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11
பற்பநாபன்,Parpanaban - (உலகமெல்லாம் தோன்றுவதற்குக் காரணமான) தாமரையைத் திருநூபியிருடையவனும்
உயர்வு அற உயரும் பெருதிறலோன்,Uyarvu Ara Uyarum Peruthiralon - வேறு எங்கும் உயர்த்தியில்லை யென்னும்படி அபாரசக்தியையுடையவனும்
என்பான்,Enpaan - என்னிடத்து ஊற்றமுடையவனும்
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னை தந்த கற்பகம்,Ennai Aakkikondhu Enakke Thannai Thandha Karppagam - என்னை யுண்டாக்கி அங்கீகாரித்து எனக்கே அஸாதாரணமாம்படி தன்னைத் தந்த கல்ப வ்ருக்ஷராயனும்
என் அமுதம்,En Amudham - எனக்குப் பரம போக்யனும்
கார்முகில் போலும்,Kaarmugil Polum - காளமேகம் போன்றவனும்
வேங்கடம் நல்வெற்பன்,Vengadam Nalveppan - திருவேங்கடமென்கிற நல்ல திருமலையை இருப்பிடமாகவுடையவனும்
விசும்போர்பிரான்,Visumbor Piran - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
தாமோதரன்,Thaamodharan - ஆச்ரித விதேயனுமான எம்பெருமான்
எந்தை,Endhai - எனக்கு ஸ்வாமி.