| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2862 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (தம் விஷயத்தில் அம்பெருமான் பண்ணின உபகாரம் மாஞானிகளாலும் அளவிட வொண்ணாதது என்கிறார். அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு இலக்காயிருக்கின்ற தம்மைப்போன்றவர்கள் அவனைக் காணக்கூடுமேயல்லது, ‘நம்முயற்சியாலே யறிவோம்’ என்றிருப்பார்க்கு அறியலாகாது என்கிறாராகவுமாம்.) 12 | தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை, ஆமோதரமறிய வொருவ ர்க்கென்றெதொழுமவர்கள், தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும், ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே.–2-7-12 | தாமோதரனை,Dhamodharanai - தாமோதரனென்கிற திரு நாமமுடையனும் தனி முதல்வனை,Thani Mudhalvanai - ஒப்பற்ற ஸகல ஜகத்காரண பூதனும் ஞாலம் உண்டவனை,Gnalam Undavanai - (பிரளயகாலத்தில்) உலகங்களைத் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனுமான எம்பெருமானை தரம் அறிய,Tharam Ariya - பகுத்து அறிவதற்கு ஒருவர்க்கு ஆமோ என்று,Oruvarukku Aamo Endru - ஒருவராலும் ஸாத்யமாகாதென்று துணிந்து தொழுமவர்கள் தாமோதரன்,Thozhumavaragal Dhamodharan - வணங்குகின்றவர்களான உரு ஆகிய சிவற்கும் திசை முகற்கும்,Uru Aakiya Sivargum Thisai Mukargum - எம்பெருமானுக்கு அவயவபூதர்களான சிவனுக்கும் பிரமனுக்கும் என் ஆழி வண்ணனை எம்மானை,En Aazhi Vannanai Emmanai - கடல் வண்ணனான எம்பெருமானை தரம் அறிய ஆமோ,Tharam Ariya Aamo - அளவிட்டு அறிதல் கூடுமோ? |