Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2863 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2863திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (இத்திருவாய்மொழி வல்லார் எம்பெருமானைப் பெறுவர்ரென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 13
வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை,
கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன்,
பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்,
பண்ணில்பன்னிரு நாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே.–2-7-13
வண்ணம் மாமணி சோதியை,Vannam Maamani Sodhiyai - நல்ல நிறமுடைய நீலமணியின் ஒளியை யுடையனாய்
கண்ணனை,Kannanai - ஸ்ரீக்ருஷ்ணனாகத் திருவவதாரித்தவனாய்
நெடு மாலை,Nedu Maalai - (ஆச்ரிதர் பக்கலில்) அளவு கடந்து செல்லுகின்ற வியாமோஹத்தை யுடையவனான எம்பெருமானைக் குறித்து
தென் குருகூர்சடகோபன்,Then Kurugoor Sadagopan - ஆழ்வார்
அமரர் தலை மகனை,Amarar Thalai Maganai - நித்யஸூரி நிர்வாஹகனாய்
பண்ணிய,Panniya - அருளிச்செய்த
தமிழ்மாலை ஆயிரத்துள்,Thamizh Maalai Aayirathul - தமிழ் மாலையாகிய இவ்வாயிரத்தினுள்ளும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு இவை பன்னிரண்டும்,Pannil Panniru Naamap Pattu Ivai Pannirandu - பண்ணோடு கூடின த்வாதச நாம கர்ப்பிதமர்ன இப் பன்னிரண்டு பாசுரங்களும்
அண்ணல்,Annal - ஸர்வேச்வரனுடைய
தாள்,Thaal - திருவடிகளை
அணைவிக்கும்,Anaivikum - சேர்ப்பிக்கும்