| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2863 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (இத்திருவாய்மொழி வல்லார் எம்பெருமானைப் பெறுவர்ரென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 13 | வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை, கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன், பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும், பண்ணில்பன்னிரு நாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே.–2-7-13 | வண்ணம் மாமணி சோதியை,Vannam Maamani Sodhiyai - நல்ல நிறமுடைய நீலமணியின் ஒளியை யுடையனாய் கண்ணனை,Kannanai - ஸ்ரீக்ருஷ்ணனாகத் திருவவதாரித்தவனாய் நெடு மாலை,Nedu Maalai - (ஆச்ரிதர் பக்கலில்) அளவு கடந்து செல்லுகின்ற வியாமோஹத்தை யுடையவனான எம்பெருமானைக் குறித்து தென் குருகூர்சடகோபன்,Then Kurugoor Sadagopan - ஆழ்வார் அமரர் தலை மகனை,Amarar Thalai Maganai - நித்யஸூரி நிர்வாஹகனாய் பண்ணிய,Panniya - அருளிச்செய்த தமிழ்மாலை ஆயிரத்துள்,Thamizh Maalai Aayirathul - தமிழ் மாலையாகிய இவ்வாயிரத்தினுள்ளும் பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு இவை பன்னிரண்டும்,Pannil Panniru Naamap Pattu Ivai Pannirandu - பண்ணோடு கூடின த்வாதச நாம கர்ப்பிதமர்ன இப் பன்னிரண்டு பாசுரங்களும் அண்ணல்,Annal - ஸர்வேச்வரனுடைய தாள்,Thaal - திருவடிகளை அணைவிக்கும்,Anaivikum - சேர்ப்பிக்கும் |