Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2865 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2865திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (கீழ்ப்பாட்டில் ‘வீடுமுதலாம்’ என்றதை விவாரிக்கிறதா யிருக்கின்றது இப்பாசுரம். எம்பெருமான் வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, அவனோடுண்டான ஸம்பந்தமே போரும் மோக்ஷமளிப்பதற்கு-என்கிறார்.) 2
நீந்தும் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2
பூ தண் புனல் பொய்கை,Poo Than Punal Poikai - அழகிய குளிர்ந்த நீரையுடைய தடாகத்தில்
யானை,Yanai - கஜேந்திராழ்வானுடைய
இடர்,Idar - ஆர்த்தியை
கடிந்த,Kadindha - தொலைத்தருளினவனும்
பூ தண் துழாய்,Poo Than Thuzhai - துழாய் மாலையை யுடைவனுமான
என் தனி நாயகன்,En Thani Naayagan - எம்பெருமானுடைய
புணர்ப்பு,Punarppu - ஸம்பந்தமர்னது
நீந்தும்,Neenthum - கடத்தற்கு அரிதான
துயர்,Thuyar - துன்பத்திற்கு ஹேதுவான
பிறவி உட்பட மற்று,Piravi Utpada Matru - பிறப்பு முதலாக மேலுமுள்ள
எவ்வெவையும் நீந்தும்,Evvevaiyum Neenthum - எப்படிப்பட்ட துன்பங்களையும் கடத்தும் (அன்றியும்)
துயர் இல்லா வீடு முதல் ஆம்,Thuyar Illa Veetu Mudhal Aam - துயர் சிறிதுமில்லாத மோக்ஷத்திற்கும் ஹேதுவாகும்.