| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2865 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (கீழ்ப்பாட்டில் ‘வீடுமுதலாம்’ என்றதை விவாரிக்கிறதா யிருக்கின்றது இப்பாசுரம். எம்பெருமான் வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, அவனோடுண்டான ஸம்பந்தமே போரும் மோக்ஷமளிப்பதற்கு-என்கிறார்.) 2 | நீந்தும் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும் நீந்தும் துயரில்லா வீடு முதலாம் பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2 | பூ தண் புனல் பொய்கை,Poo Than Punal Poikai - அழகிய குளிர்ந்த நீரையுடைய தடாகத்தில் யானை,Yanai - கஜேந்திராழ்வானுடைய இடர்,Idar - ஆர்த்தியை கடிந்த,Kadindha - தொலைத்தருளினவனும் பூ தண் துழாய்,Poo Than Thuzhai - துழாய் மாலையை யுடைவனுமான என் தனி நாயகன்,En Thani Naayagan - எம்பெருமானுடைய புணர்ப்பு,Punarppu - ஸம்பந்தமர்னது நீந்தும்,Neenthum - கடத்தற்கு அரிதான துயர்,Thuyar - துன்பத்திற்கு ஹேதுவான பிறவி உட்பட மற்று,Piravi Utpada Matru - பிறப்பு முதலாக மேலுமுள்ள எவ்வெவையும் நீந்தும்,Evvevaiyum Neenthum - எப்படிப்பட்ட துன்பங்களையும் கடத்தும் (அன்றியும்) துயர் இல்லா வீடு முதல் ஆம்,Thuyar Illa Veetu Mudhal Aam - துயர் சிறிதுமில்லாத மோக்ஷத்திற்கும் ஹேதுவாகும். |