Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2866 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2866திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) ( முதற்பாட்டில் “இருவரவர் முதலுந்தானே” என்றதை விவரித்துக் கொண்டு, அப்பெருமானுடைய ஐச்வர்ய ஸூசகமான சேஷ்டிதங்கள் எங்கும் ப்ரஸித்தமாகவே யுள்ளன வென்கிறார்.) 3
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3
தன் புணர்த்த,Than Punarthu - தன்னைப் படைத்த
உந்தியோடு,Undhiyodu - திருநாபியோடேகூட
ஆகத்து,Aagathu - திருமேனியிலொரு பக்கத்திலும்
மன்னி,Manni - பொருந்தியிருந்து
புணாக்கும்,Punaakkum - லோக ஸ்ருஷ்டியைப் பண்ணுகிற
அயன் ஆம்,Ayan Aam - பிரமனும் தானேயாயிருப்பன்;
அழிக்கும் அரன் ஆம்,Azhikkum Aran Aam - ஸம்ஹாரிக்கிற ருத்ரனும் தானேயாயிருப்பன்.
தன் மார்வில்,Than Maarvil - தனது திருமார்பிலே
புணர்த்த,Punartha - சேர்த்துக்கொள்ளப்பட்ட
திரு ஆகி,Thiru Aagi - பிராட்டியை யுடையனாய்
தான் சேர்,Thaan Ser - தானே தனக்குத் தகுதியான
புணர்ப்பன்,Punarppan - செயலை யுடையனான அப்பெருமானது
பெரு புணர்ப்பு,Peru Punarppu - பெரிய வியாபாரம்
எங்கும்,Engum - எவ்விடத்தும்
புலன்,Pulan - பரத்யக்ஷயோக்யமே.