திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2867 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2867திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (அற்பமான விஷய ஸூகங்களைவிட்டு, அற்புத இன்பமயமான மோக்ஷ புருஷார்த்தத்தைப் பெற்றுக் களிப்புறபேண்டி யிருப்பீர்! எம்பெருமானுடைய திருக்குணங்களிலே இடைவிடாது அவகாஹித்துப் போருங்கோள், என்கிறார்) 4
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி நலமந்த மில்லதோர் நாடு புகுவீர் அலமந்து வீய அசுரரைச் செற்றான் பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4
பதவுரை Show / Hide
புலன் ஐந்து,Pulan Aindhu - சப்தாதி விஷயங்கள் ஐந்திலும்
மேயும்,Meyum - மேய்கின்ற
பொறி ஐந்தும்,Pori aindhum - பஞ்சேந்திரியங்களின் வசத்தில் நின்றும்
நீங்கி,Neengi - விலகி
நலம் அந்தம் இல்லர் ஓர்நாடு புகுவீர்,Nalam andham illar oornadu puguveer - ஆனந்தம் அளவிறந்திருப்பதான திருநாட்டிலே போய்ப்புக வேண்டியிருப்பவர்களே!
அசுரரை,Asurarai - அசுரர்களை
அலமந்து வீய செற்றான்,Alamandhu veeya setraan - குடல் குழம்பிச் சாகும்படி கொன்ற பெருமானுடைய
பலம் முந்து சீரில்,Palam mundhu seeril - பலனே முந்தியிருக்கின்ற திருக்குணங்களில்
ஓவாதே,Ovaadhe - அநவரதம்
படிமின்,Padimin - அவகாஹியுங்கள்.