| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2867 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (அற்பமான விஷய ஸூகங்களைவிட்டு, அற்புத இன்பமயமான மோக்ஷ புருஷார்த்தத்தைப் பெற்றுக் களிப்புறபேண்டி யிருப்பீர்! எம்பெருமானுடைய திருக்குணங்களிலே இடைவிடாது அவகாஹித்துப் போருங்கோள், என்கிறார்) 4 | புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி நலமந்த மில்லதோர் நாடு புகுவீர் அலமந்து வீய அசுரரைச் செற்றான் பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4 | புலன் ஐந்து,Pulan Aindhu - சப்தாதி விஷயங்கள் ஐந்திலும் மேயும்,Meyum - மேய்கின்ற பொறி ஐந்தும்,Pori aindhum - பஞ்சேந்திரியங்களின் வசத்தில் நின்றும் நீங்கி,Neengi - விலகி நலம் அந்தம் இல்லர் ஓர்நாடு புகுவீர்,Nalam andham illar oornadu puguveer - ஆனந்தம் அளவிறந்திருப்பதான திருநாட்டிலே போய்ப்புக வேண்டியிருப்பவர்களே! அசுரரை,Asurarai - அசுரர்களை அலமந்து வீய செற்றான்,Alamandhu veeya setraan - குடல் குழம்பிச் சாகும்படி கொன்ற பெருமானுடைய பலம் முந்து சீரில்,Palam mundhu seeril - பலனே முந்தியிருக்கின்ற திருக்குணங்களில் ஓவாதே,Ovaadhe - அநவரதம் படிமின்,Padimin - அவகாஹியுங்கள். |