திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2868 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2868திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (முதற்பாட்டில் “இணைவனா மெப்பொருட்கும்” என்றது. இப்பாசுரத்தினால் விவரிக்கப்படுகிறது. ஹயக்ரீவ மத்ஸ்ய கூர்ம ராம க்ருஷ்ணாதி ரூபத்தாலே திருவவதாரங்கள் பண்ணி மூவுலங்களையுங் காத்தருள்பவனென்கிறது.) 5
ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும் மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன் மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5
பதவுரை Show / Hide
ஓவா துயர்,Ova thuyar - இடைவிடாத துக்கத்தை விளைக்கிற
பிறவி உள்பட,Piravi ulpada - ஜன்மம் முதலாக
மற்று எவ்வெவையும்,Matru evvevaiyum - மற்றுமுள்ளவை யெல்லாவற்றுக்கும் (அதாவது ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளுக்கென்றபடி)
மூவா,Moova - ஒரு நாளும் கை வாங்காத
தனி முதல் ஆய்,Thani mudhal aay - அஸஹாய காரண பூதனாய்க் கொண்டு.
மூ உலகும் காவலோன்,Moo ulagum kaavalon - மூன்று லோகங்களையும் ரக்ஷிக்க வல்லவனாய்
தேவ ஆதி தேவர் பெருமான்,Theva adhi devar perumaan - தேவர்களுக்கும் ஆதி தேவர்களான நித்ய ஸூரிகளுக்கும் அதிபதியாய்
என் தீர்த்தன்,En theerdhan - என்னைப் பரிசுத்தனாக்க வல்லனான பெருமான்
மா ஆகி,Maa aagi - ஹயக்ரிவனாக அவதரித்தும்
ஆமை ஆய்,Aamai aay - கூர்மமாக அவதரித்தும்
மீன் ஆகி,Meen aagi - மத்ஸ்யமாக அவதரித்தும்
மானிடம் ஆம்,Maanitam aam - (ராம க்ருஷ்ணாதி ரூபேண) மநுஷ்யனாகவும் அவதரிக்குமவன்