Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2868 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2868திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (முதற்பாட்டில் “இணைவனா மெப்பொருட்கும்” என்றது. இப்பாசுரத்தினால் விவரிக்கப்படுகிறது. ஹயக்ரீவ மத்ஸ்ய கூர்ம ராம க்ருஷ்ணாதி ரூபத்தாலே திருவவதாரங்கள் பண்ணி மூவுலங்களையுங் காத்தருள்பவனென்கிறது.) 5
ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5
ஓவா துயர்,Ova thuyar - இடைவிடாத துக்கத்தை விளைக்கிற
பிறவி உள்பட,Piravi ulpada - ஜன்மம் முதலாக
மற்று எவ்வெவையும்,Matru evvevaiyum - மற்றுமுள்ளவை யெல்லாவற்றுக்கும் (அதாவது ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளுக்கென்றபடி)
மூவா,Moova - ஒரு நாளும் கை வாங்காத
தனி முதல் ஆய்,Thani mudhal aay - அஸஹாய காரண பூதனாய்க் கொண்டு.
மூ உலகும் காவலோன்,Moo ulagum kaavalon - மூன்று லோகங்களையும் ரக்ஷிக்க வல்லவனாய்
தேவ ஆதி தேவர் பெருமான்,Theva adhi devar perumaan - தேவர்களுக்கும் ஆதி தேவர்களான நித்ய ஸூரிகளுக்கும் அதிபதியாய்
என் தீர்த்தன்,En theerdhan - என்னைப் பரிசுத்தனாக்க வல்லனான பெருமான்
மா ஆகி,Maa aagi - ஹயக்ரிவனாக அவதரித்தும்
ஆமை ஆய்,Aamai aay - கூர்மமாக அவதரித்தும்
மீன் ஆகி,Meen aagi - மத்ஸ்யமாக அவதரித்தும்
மானிடம் ஆம்,Maanitam aam - (ராம க்ருஷ்ணாதி ரூபேண) மநுஷ்யனாகவும் அவதரிக்குமவன்