| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2868 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (முதற்பாட்டில் “இணைவனா மெப்பொருட்கும்” என்றது. இப்பாசுரத்தினால் விவரிக்கப்படுகிறது. ஹயக்ரீவ மத்ஸ்ய கூர்ம ராம க்ருஷ்ணாதி ரூபத்தாலே திருவவதாரங்கள் பண்ணி மூவுலங்களையுங் காத்தருள்பவனென்கிறது.) 5 | ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும் மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன் மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5 | ஓவா துயர்,Ova thuyar - இடைவிடாத துக்கத்தை விளைக்கிற பிறவி உள்பட,Piravi ulpada - ஜன்மம் முதலாக மற்று எவ்வெவையும்,Matru evvevaiyum - மற்றுமுள்ளவை யெல்லாவற்றுக்கும் (அதாவது ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளுக்கென்றபடி) மூவா,Moova - ஒரு நாளும் கை வாங்காத தனி முதல் ஆய்,Thani mudhal aay - அஸஹாய காரண பூதனாய்க் கொண்டு. மூ உலகும் காவலோன்,Moo ulagum kaavalon - மூன்று லோகங்களையும் ரக்ஷிக்க வல்லவனாய் தேவ ஆதி தேவர் பெருமான்,Theva adhi devar perumaan - தேவர்களுக்கும் ஆதி தேவர்களான நித்ய ஸூரிகளுக்கும் அதிபதியாய் என் தீர்த்தன்,En theerdhan - என்னைப் பரிசுத்தனாக்க வல்லனான பெருமான் மா ஆகி,Maa aagi - ஹயக்ரிவனாக அவதரித்தும் ஆமை ஆய்,Aamai aay - கூர்மமாக அவதரித்தும் மீன் ஆகி,Meen aagi - மத்ஸ்யமாக அவதரித்தும் மானிடம் ஆம்,Maanitam aam - (ராம க்ருஷ்ணாதி ரூபேண) மநுஷ்யனாகவும் அவதரிக்குமவன் |