| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2869 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (“தேவாதி தேவபெருமான்” என்று கீழ்ப்பாட்டில் ப்ரஸ்தாவிக்கப்பட்ட பெரு மேன்மை, பண்டே அர்ஜூனன் நிரூபித்து நிர்ணயித்த விஷயமாதலால், மிக ப்ரஸித்தமானவதில் மற்றை யோருடைய ஆராய்ச்சி வேணுமோ வென்கிறார்.) 6 | தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6 | தீர்த்தன்,Theerthan - பரம பவித்திரனான கண்ணபிரானுடைய உலகு அளந்த சே அடி மேல்,Ulagu alandha se adi mel - உலகமளந்த திருவடிகளிலே பூ தாமம்,Poo thaamam - புஷ்பமாலையை பார்த்தன்,Paarthan - அர்ஜூனன் சேர்த்தி,Seerthi - ஸமாப்பித்து அவையே,Avaiye - அப்பூமாலையையே சிவன் முடிமேல்,Sivan mudimel - சிவபிரானுடைய தளைமேல் தான் கண்டு,Thaan kandu - தானே பார்த்து தெளிந்து ஒழிந்த,Thelinthu ozhindhu - நன்றாகத் தெளியப்பெற்ற பைந்துழாயான் பெருமை,Painthuzhaayana perumai - பைந்துழாய் மாலையனான பெருமானுடைய பெருமை பேர்த்தும் ஒருவரால்,Perthum oruvaraal - மற்ற பேர்களாலே பேச கிடந்ததே,Pesa kidandhadhe - பேசவேண்டும்படி யிரா நின்றதோ? |