Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2869 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2869திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (“தேவாதி தேவபெருமான்” என்று கீழ்ப்பாட்டில் ப்ரஸ்தாவிக்கப்பட்ட பெரு மேன்மை, பண்டே அர்ஜூனன் நிரூபித்து நிர்ணயித்த விஷயமாதலால், மிக ப்ரஸித்தமானவதில் மற்றை யோருடைய ஆராய்ச்சி வேணுமோ வென்கிறார்.) 6
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6
தீர்த்தன்,Theerthan - பரம பவித்திரனான கண்ணபிரானுடைய
உலகு அளந்த சே அடி மேல்,Ulagu alandha se adi mel - உலகமளந்த திருவடிகளிலே
பூ தாமம்,Poo thaamam - புஷ்பமாலையை
பார்த்தன்,Paarthan - அர்ஜூனன்
சேர்த்தி,Seerthi - ஸமாப்பித்து
அவையே,Avaiye - அப்பூமாலையையே
சிவன் முடிமேல்,Sivan mudimel - சிவபிரானுடைய தளைமேல்
தான் கண்டு,Thaan kandu - தானே பார்த்து
தெளிந்து ஒழிந்த,Thelinthu ozhindhu - நன்றாகத் தெளியப்பெற்ற
பைந்துழாயான் பெருமை,Painthuzhaayana perumai - பைந்துழாய் மாலையனான பெருமானுடைய பெருமை
பேர்த்தும் ஒருவரால்,Perthum oruvaraal - மற்ற பேர்களாலே
பேச கிடந்ததே,Pesa kidandhadhe - பேசவேண்டும்படி யிரா நின்றதோ?