Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2870 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2870திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (இவ்விபூதி எம்பெருமானுக்கே அஸாதாரண மென்னுமிடத்திற்குத் தனித்தனியே உபபத்திகள் பலபல வுளவென்கிறார்.) 7
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7
கிடந்து,Kidandhu - (கடற்கரையில் வழி வேண்டிக்) கிடந்து
இருந்து,Irundhu - (சித்திரக்கூட கிரியில் இருந்தும்
நின்று,Nindru - (ராவணனை முடித்தபிறகு இலங்கை வாசலில் வீர ஸ்ரீயோடே) நின்றும்.
அளந்து,Alandhu - த்ரிவிக்ரமாவதாரஞ் செய்தும்.
கேழல் ஆய்,Kezhal aay - வராஹ ரூபியாகி
கீழ் புக்கு,Keel pukku - பிரளய வெள்ளத்தின் கீழே புகுந்து
இடந்திடும்,Idandhidum - அண்ட கடாஹத்தினின்றும் பூமியை ஒட்டு விடுவித்தெடுத்தும் (ஆக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்பவனாய்)
தன்னுள்,Thannul - தனக்குள்ளே கரக்கும் (மூவுலகையும்) மறைத்து வைப்பவனாய்
உமிழும்,Ummizhum - பிறகு வெளிப்படுத்துபவனாய்
தட பெரு தோள் ஆர தழுவும்,Thada peru thol aara thazhuvum - மிகப் பெரிய திருத்தோள்கள் நிரம்பும்படி தழுவிக் கொள்பவனாய் (ஆக இப்படிகளாலே
பார் என்னும் மடந்தையை,Paar ennum madandhaiyai - பூமிப்பிராட்டி திறத்திலே
மால்,Maal - ஸர்வேச்வரன்
செய்கின்ற,Seykinra - படுகிற
மால்,Maal - வ்யாமோஹத்தை
ஆர்காண்பார்,Aarkaanpaar - அறியவல்லாரார்?