| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2870 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (இவ்விபூதி எம்பெருமானுக்கே அஸாதாரண மென்னுமிடத்திற்குத் தனித்தனியே உபபத்திகள் பலபல வுளவென்கிறார்.) 7 | கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும் தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7 | கிடந்து,Kidandhu - (கடற்கரையில் வழி வேண்டிக்) கிடந்து இருந்து,Irundhu - (சித்திரக்கூட கிரியில் இருந்தும் நின்று,Nindru - (ராவணனை முடித்தபிறகு இலங்கை வாசலில் வீர ஸ்ரீயோடே) நின்றும். அளந்து,Alandhu - த்ரிவிக்ரமாவதாரஞ் செய்தும். கேழல் ஆய்,Kezhal aay - வராஹ ரூபியாகி கீழ் புக்கு,Keel pukku - பிரளய வெள்ளத்தின் கீழே புகுந்து இடந்திடும்,Idandhidum - அண்ட கடாஹத்தினின்றும் பூமியை ஒட்டு விடுவித்தெடுத்தும் (ஆக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்பவனாய்) தன்னுள்,Thannul - தனக்குள்ளே கரக்கும் (மூவுலகையும்) மறைத்து வைப்பவனாய் உமிழும்,Ummizhum - பிறகு வெளிப்படுத்துபவனாய் தட பெரு தோள் ஆர தழுவும்,Thada peru thol aara thazhuvum - மிகப் பெரிய திருத்தோள்கள் நிரம்பும்படி தழுவிக் கொள்பவனாய் (ஆக இப்படிகளாலே பார் என்னும் மடந்தையை,Paar ennum madandhaiyai - பூமிப்பிராட்டி திறத்திலே மால்,Maal - ஸர்வேச்வரன் செய்கின்ற,Seykinra - படுகிற மால்,Maal - வ்யாமோஹத்தை ஆர்காண்பார்,Aarkaanpaar - அறியவல்லாரார்? |