Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2871 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2871திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (எம்பெருமானது அறிபுதத் தொழில்கள் எப்படிப்பட்டவர்கட்கும் எல்லை காணமுடியா வென்கிறார்.) 8
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
எண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8
எம் ஈசன்,Em Isan - எமக்கு ஸ்வாமியான
கண்ணனை,Kannanai - ஸ்ரீக்ருஷ்ணனை
காண்பார்ஆர்,Kaanpaar aar - அறியவல்லார்யார்?
காணும் ஆறு என்,Kaanum aaru en - அறியும் விதந்தான் யாது? (அவனுக்கு)
ஊண்பேசில்,Oonpaesil - உணவு இன்னதென்று சொல்லப் புகுந்தால்
எல்லா உலகும்,Ella ulagum - எல்லா வுலகங்களும்
ஓர் துற்று,Or thutru - ஒரு கபளத்திற்கும்
ஆற்றா,Aattra - போதாது;
வீடோ,Veetoo - (அவனுக்கு) வீடாயிருக்குமிடமோ
சேண்பால,Senpaal - எல்லா வுலகங்களுக்கும் மேற்பட்டு வெகு தூரத்திலுள்ளது;
மற்று எப்பொருட்கும்,Matru epporutkum - (அவனோ) (தன்னை யொழிந்த) எவ் வகைப் பொருட்கும்
உயிர்,Uyir - அந்தர்யாமி;
ஏண்பாலும்,Yenpaalum - எண்ணப்பட்ட ஓரிடமும்
சோரான்,Sooraan - விடாதவனாய்
எங்கும்,Engum - எல்லா விடங்களிலும்
பரந்து,Paranthu - வியாபித்து
உளன் ஆம்,Ulan aam - இருப்பவனாவன்