| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2871 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (எம்பெருமானது அறிபுதத் தொழில்கள் எப்படிப்பட்டவர்கட்கும் எல்லை காணமுடியா வென்கிறார்.) 8 | காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும் எண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8 | எம் ஈசன்,Em Isan - எமக்கு ஸ்வாமியான கண்ணனை,Kannanai - ஸ்ரீக்ருஷ்ணனை காண்பார்ஆர்,Kaanpaar aar - அறியவல்லார்யார்? காணும் ஆறு என்,Kaanum aaru en - அறியும் விதந்தான் யாது? (அவனுக்கு) ஊண்பேசில்,Oonpaesil - உணவு இன்னதென்று சொல்லப் புகுந்தால் எல்லா உலகும்,Ella ulagum - எல்லா வுலகங்களும் ஓர் துற்று,Or thutru - ஒரு கபளத்திற்கும் ஆற்றா,Aattra - போதாது; வீடோ,Veetoo - (அவனுக்கு) வீடாயிருக்குமிடமோ சேண்பால,Senpaal - எல்லா வுலகங்களுக்கும் மேற்பட்டு வெகு தூரத்திலுள்ளது; மற்று எப்பொருட்கும்,Matru epporutkum - (அவனோ) (தன்னை யொழிந்த) எவ் வகைப் பொருட்கும் உயிர்,Uyir - அந்தர்யாமி; ஏண்பாலும்,Yenpaalum - எண்ணப்பட்ட ஓரிடமும் சோரான்,Sooraan - விடாதவனாய் எங்கும்,Engum - எல்லா விடங்களிலும் பரந்து,Paranthu - வியாபித்து உளன் ஆம்,Ulan aam - இருப்பவனாவன் |