| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2873 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (ஸம்ஸாரிகள் எம்பெருமானை மறந்து எப்படியாவது தொலையட்டும் அவர்களில் ஒருத்தனான நானும் அவர்களைப்போலே பாழ்பட்டொழியாமே ஒருவாறு உஜ்ஜீவிக்கப் பெற்றேனே! என்று தமக்கு நேர்ந்த லாபத்தைக் குறித்துக் களித்துப் பேசுகிறார்.) 10 | சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10 | சீர்மை கொள்,Seermai kol - மேன்மை பொருந்திய வீடு,Veedu - மோக்ஷமும் சுவர்க்கம்,Suvarkkam - ஸ்வர்க்கமும் நரகு,Narakku - நரகமும் ஈரு ஆ,Eeru aa - மேலெல்லையாக ஈர்மை கொள் தேவர் நடு ஆ,Eermai kol thaevar nandu aa - ஈர நெஞ்சுடையரான தேவர்கள் நடுவாக மற்று எப்பொருட்கும்,Matru yepporutkum - மற்றெல்லாப் பொருள்களுக்கும் வேர் ஆய் முதல் ஆய் வித்து ஆய்,Veer aa muthal aa vithu aai - மூவகைக் காரணமும் தானே யாய் பரந்து,Paranthu - எங்கும் வியாபித்து தனி நின்ற,Thani nindru - பரம விலக்ஷணனா யிருக்கின்ற கார்முகில் போல் வண்ணன்,Kaarmukil pol vannan - காளமேக நிறத்தனான என் கண்ணனை,En kannanai - எம்பெருமானை நான் கண்டேன்,Naan kandeen - நான் அநுபவிக்கப் பெற்றேன் |