Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2874 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2874திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (பரந்து சிவந்திருந்துள்ள திருக்கண்களையும் அவற்றுக்குப் பரபாகமாகக் கறுத்த திருமேனியையுமுடைய எம்பெருமானைக் குறித்து, ஆழ்வார்பண்ணின் மேலே அருளிச்செய்தவாயிரத்துள் இப்பதிகத்தை ஓதவல்லவர்கள், திருநாட்டிலே வீற்றிருந்து நித்யானந்த மனுபவிக்கப் பெறுவார்களென்று, இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று.) 11
கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11
கண் தலங்கள் செய்ய,Kan thalangal seiya - திருக்கண்கள் சிவந்திருக்கப் பெற்றவனாய்
கரு மேனி,Karu meni - கரிய திருமேனியை யுடையனான
அம்மானை,Ammaanai - ஸ்வாமி விஷயமாக
வண்டு அலம்பும் சோலை வளம் வழுதி நாடன்,Vandu alampum solai valam vazhuthi naadan - வண்டுகள் ஒலிக்கின்ற சோலை வளம் பொருந்திய திருவழுதி நாட்டுக்குத் தலைவரான ஆழ்வார்
பண் தலையில் சொன்ன,Pan thalaiyil sonna - தலைமையாகிய பண்களில் அமைத்துச் சொன்ன
தமிழ் ஆயிரத்து,Thamizh aayirathu - இப்பத்தும் வல்லார்
விண் தலையில்,Vin thalaiyil - பரமபதத்தில்
வீற்றிருந்து,Veettrindru - வஸிக்கப்பெற்று
எம்மா வீடு,Emma veedu - அறப்பெரிய ப்ரஹ்மானந்தத்தை
ஆள்வர்,Aalvar - அநுபவிக்கப் பெறுவர்