திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2876 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2876திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (எம்பெருமான் திருவடிகள் தம் தலைமேல்வந்து பொருந்த வேணுமென்று கீழ்ப்பாட்டில் வேண்டினார்; ஞானக் கை தந்தருள வேணுமென்று விரும்புகிறாரிப்பாட்டில்.) 2
ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என் மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய் எய்தா நின் கழல் யான் எய்த ஞானக் கை தா காலக் கழிவு செய்யலே –2-9-2
பதவுரை Show / Hide
என்,En - எனது அநுபவத்திற்கு உரிய
மை தோய் சோதி மணி வண்ணம் எந்தாய்,Mai thoy sodhi mani annam enthai - கருமை படிந்த ஒளியையுடைய மாணிக்கம் போன்ற வடிவழகுள்ள ஸ்வாமியே!
யான்,Yaan - நான்
எஞ்ஞான்றும்,Yengnanrum - என்றைக்கும்
உன்னை,Unnai - தேவரீரிடத்தில்
கொள்வது,Kolvadhu - பிரார்த்திப்பது
ஈதே,Eedhe - இஃதொன்றேயாகும் (அது யாதெனில்)
எய்தா,Eyda - பெறுதற்காரிதான
நின் கழல்,Nin kazhal - தேவரீருடைய திருவடிகளை
யான் எய்த,Yaan eydha - நான் அடையும்படியாக
ஞானம் கைதா,Gnaanam kaidha - ஞானமாகிய கையை
தா,Thaa - தந்தருளவேணும்
காலம் கழிவு செய்யேல்,Kaalam kazhivu seyyel - காலதாமதம் செய்ய வேண்டா.