| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2876 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (எம்பெருமான் திருவடிகள் தம் தலைமேல்வந்து பொருந்த வேணுமென்று கீழ்ப்பாட்டில் வேண்டினார்; ஞானக் கை தந்தருள வேணுமென்று விரும்புகிறாரிப்பாட்டில்.) 2 | ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என் மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய் எய்தா நின் கழல் யான் எய்த ஞானக் கை தா காலக் கழிவு செய்யலே –2-9-2 | என்,En - எனது அநுபவத்திற்கு உரிய மை தோய் சோதி மணி வண்ணம் எந்தாய்,Mai thoy sodhi mani annam enthai - கருமை படிந்த ஒளியையுடைய மாணிக்கம் போன்ற வடிவழகுள்ள ஸ்வாமியே! யான்,Yaan - நான் எஞ்ஞான்றும்,Yengnanrum - என்றைக்கும் உன்னை,Unnai - தேவரீரிடத்தில் கொள்வது,Kolvadhu - பிரார்த்திப்பது ஈதே,Eedhe - இஃதொன்றேயாகும் (அது யாதெனில்) எய்தா,Eyda - பெறுதற்காரிதான நின் கழல்,Nin kazhal - தேவரீருடைய திருவடிகளை யான் எய்த,Yaan eydha - நான் அடையும்படியாக ஞானம் கைதா,Gnaanam kaidha - ஞானமாகிய கையை தா,Thaa - தந்தருளவேணும் காலம் கழிவு செய்யேல்,Kaalam kazhivu seyyel - காலதாமதம் செய்ய வேண்டா. |