Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2878 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2878திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (இத்திருவாய்மொழிக்கு உயிரான பாசுரம் இது. எல்லாப்படியாலும் அத்தலைக்கே உரித்தாயிருக்கும்படியான அத்யந்த பாரதந்திரியத்தை ப்ரயோஜனமாக நிஷ்கர்ஷிக்கிறாரிதில்) 4
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4
எக்காலத்தும்,Ekkalathum - எக்காலத்திலும்
எனக்கே ஆள் செய் என்று,Enakke aal sey endru - ‘எனக்கே அடிமை செய்யக் கடவாய்’ என்று சொல்லி
என் மனக்கே வந்து,En manakke vanthu - எனது மனத்திலேயே எழுந்தருளி
இடை வீடு இன்றி,Idai veedu indri - இடைவிடாமல்
மன்னி,Manni - நிலைபெற்றிருந்து
தனக்கே ஆக,Thanakke aaga - தனக்கே உரியேனாம் படி
எனை,Enai - என்னை
கொள்ளும் ஈதே,Kollum eethe - அங்கீகாரித்தருளுமிதுவே
எனக்கே,Enakke - என் ஸ்வரூபத்திற்குத் தகுதியாக
கண்ணனை,Kannanai - எம்பெருமானிடத்து
யான் கொள்,Yaan kol - நான் விரும்புகின்ற
சிறப்பு,Sirappu - சிறந்த பிரயோஜனம்