| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2878 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (இத்திருவாய்மொழிக்கு உயிரான பாசுரம் இது. எல்லாப்படியாலும் அத்தலைக்கே உரித்தாயிருக்கும்படியான அத்யந்த பாரதந்திரியத்தை ப்ரயோஜனமாக நிஷ்கர்ஷிக்கிறாரிதில்) 4 | எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4 | எக்காலத்தும்,Ekkalathum - எக்காலத்திலும் எனக்கே ஆள் செய் என்று,Enakke aal sey endru - ‘எனக்கே அடிமை செய்யக் கடவாய்’ என்று சொல்லி என் மனக்கே வந்து,En manakke vanthu - எனது மனத்திலேயே எழுந்தருளி இடை வீடு இன்றி,Idai veedu indri - இடைவிடாமல் மன்னி,Manni - நிலைபெற்றிருந்து தனக்கே ஆக,Thanakke aaga - தனக்கே உரியேனாம் படி எனை,Enai - என்னை கொள்ளும் ஈதே,Kollum eethe - அங்கீகாரித்தருளுமிதுவே எனக்கே,Enakke - என் ஸ்வரூபத்திற்குத் தகுதியாக கண்ணனை,Kannanai - எம்பெருமானிடத்து யான் கொள்,Yaan kol - நான் விரும்புகின்ற சிறப்பு,Sirappu - சிறந்த பிரயோஜனம் |