| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2879 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (தேஹமே ஆத்மாவாக இருக்கட்டும் அன்றி தேஹத்திற்காட்டில் வேறுபட்டிருப்பானொருவன் ஆத்மாவாக இருக்கட்டும் ஸ்வர்க்கம் நரகம் முதலானவற்றில் எது கிடைத்தாலும் கிடைக்கட்டும் இவற்றிலெல்லாம் எனக்கொரு நிர்ப்பந்தமில்லை; பின்னை எதில் நிர்ப்பந்த மென்னில் தேவரீர் கரமங்காரணமான பிறப்பு அல்லாதவராயிருந்து வைத்து ஆச்ரித ரக்ஷணார்த்தமாகப் பல பிறவிகளிலும் பிறந்தருள்பவராயிராநின்றீரே; அந்த அவதாரங்களையும் ஸகல திவ்ய சேஷ்டிதங்களையும் மறவாதே, என்றும் அநுபவிக்கப் பெறுவேனாகவேணும் ஈதொன்றிலேயே எனக்கு நிர்ப்பந்தம் என்கிறார்.) 5 | சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம் இறப்பில் எய்துக எய்தற்க யானும் பிறப்பில் பல் பிறவிப் பெருமானை மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5 | இறப்பில்,Irapil - மரணமான பிறகு சிறப்பில் வீடு,Sirappil veedu - சிறப்புடன் கூடிய மோக்ஷத்தையோ சுவர்க்கம்,Suvarkkam - ஸ்வர்க்கத்தையோ நரகம்,Naragam - நரகத்தையோ எய்துக,Eydhuga - அடைவேனாக எய்தற்க,Eydharka - அடையாதொழிவேனாக பிறப்பு இல்,Pirappu il - (நம்மைப்போலே கருமமடியாகப் பிறவாதவனும்) பல் பிறவி,Pal piravi - அநுக்ரஹ மடியாகப்) பல பிறவி பிறக்கின்றவனுமான ஸ்வாமியை மறப்பு ஒன்று இன்றி,Marappu onru indri - சிறிதும் மறவாமல் என்றும்,Endrum - எக்காலத்திலும் (சிந்தித்து) யானும் மகிழ்வேன்,Yaanum magizhven - (நீசனான) நானும் களிப்புறுவேன். |