Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2880 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2880திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (இப்பாசுரத்திற்கு இரண்டுவகையாக அவதாரிகை கூறுவர்;- தேவர் மனிதர் முதலிய பதார்த்தங்களைப் படைத்ததுப்போலே, என்னையும் உன்னை யநுபவிப்பேனாம்படி பண்ணவேணு மென்கிறார்; அன்றியே, தேவாதி பதார்த்தங்களுக்கு ஒவ்வொரு ஸ்வபாவம் நியதமர்ம்படி பண்ணிணனாப்போலே, எனக்கு உன்னை யநுபவிக்குமது நியதஸ்வபாவமாமபடி பண்ணியருள வேணுமென்கிறார். -தாற்பாரியமாகத் தேறுவது ஒன்றே) 6
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6
மகிழ் கொள்,Magizh kol - மகிழ்ச்சியைக் கொண்ட
தெய்வம்,Theivam - தேவ வர்க்கமும்
உலோகம்,Ulogam - ஞான வொளியையுடைய மானிட வர்க்கமும்
அலோகம்,Alogam - ஞானவொளியில்லாத விலங்கு தாவரம் என்பவையும்
மகிழ்கொள் சோதி,Magizhkol jyothi - உலகுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற சோதிப்பொருள்களான சந்திர ஸூரியர்களும்
மலர்ந்த,Malarnthu - (நன்னிடத்தில் நின்றும் உண்டாகப்பெற்ற)
அம்மானே,Ammaane - ஸர்வேச்வரனே
மகிழ் கொள் சிந்தை,Magizh kol sindhai - அன்பு கொண்ட நினைவையும்
சொல்,Sol - சொல்லையும்
கொண்டு,Kondhu - ஏற்றுக்கொண்டு
என்றும்,Endrum - எக்காலத்திலும்
மகிழ்வுற்று,Magizhvutru - மகிழ்ச்சியுடன்
உன்னை வணங்க,Unnai vananga - உன்னை வணங்கும்படி
வாராய்,Vaara - (என்னெதிரே) எழுந்தருள வேணும்