| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2880 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (இப்பாசுரத்திற்கு இரண்டுவகையாக அவதாரிகை கூறுவர்;- தேவர் மனிதர் முதலிய பதார்த்தங்களைப் படைத்ததுப்போலே, என்னையும் உன்னை யநுபவிப்பேனாம்படி பண்ணவேணு மென்கிறார்; அன்றியே, தேவாதி பதார்த்தங்களுக்கு ஒவ்வொரு ஸ்வபாவம் நியதமர்ம்படி பண்ணிணனாப்போலே, எனக்கு உன்னை யநுபவிக்குமது நியதஸ்வபாவமாமபடி பண்ணியருள வேணுமென்கிறார். -தாற்பாரியமாகத் தேறுவது ஒன்றே) 6 | மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6 | மகிழ் கொள்,Magizh kol - மகிழ்ச்சியைக் கொண்ட தெய்வம்,Theivam - தேவ வர்க்கமும் உலோகம்,Ulogam - ஞான வொளியையுடைய மானிட வர்க்கமும் அலோகம்,Alogam - ஞானவொளியில்லாத விலங்கு தாவரம் என்பவையும் மகிழ்கொள் சோதி,Magizhkol jyothi - உலகுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற சோதிப்பொருள்களான சந்திர ஸூரியர்களும் மலர்ந்த,Malarnthu - (நன்னிடத்தில் நின்றும் உண்டாகப்பெற்ற) அம்மானே,Ammaane - ஸர்வேச்வரனே மகிழ் கொள் சிந்தை,Magizh kol sindhai - அன்பு கொண்ட நினைவையும் சொல்,Sol - சொல்லையும் கொண்டு,Kondhu - ஏற்றுக்கொண்டு என்றும்,Endrum - எக்காலத்திலும் மகிழ்வுற்று,Magizhvutru - மகிழ்ச்சியுடன் உன்னை வணங்க,Unnai vananga - உன்னை வணங்கும்படி வாராய்,Vaara - (என்னெதிரே) எழுந்தருள வேணும் |