Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2882 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2882திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (எம்பெருமானோடு ஒரு க்ஷணகாலமாவது இப்போது சேரப் பெறுவானாயின் அது போதும் மறுபடியும் சேரவேணுமென்கிற விருப்பங்கூட எனக்கு உண்டாகாது என்கிறார்.) 8
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8
நிக்கார்,Nikkaar - சிறந்தவர்களான
வேதம் விமலர்,Vedham Vimalar - வேதம் வல்ல பரமைகாந்திகள்
வழுங்கும்,Vazhungum - (அன்பு மிகுதியினால்) விழுங்குப்படியாகவுள்ள
என் அக்காரக் கனியே,En akkaarak kaniye - அக்காரக் கனிபோன்ற எம்பெருமானே!
எக்காலத்து,Ekkalathu - எப்போதும்
எந்தை ஆய்,Endhai aay - எனக்கு ஸ்வாமியாகி
என் உள்,En ul - எனது நெஞ்சிலே
மண்ணில்,Mannil - பொருந்தி யெழுந்தருளியிருக்கப் பெறில்
மற்று யாது ஒன்றும்,Matru yaadhu ondrum - வேறொரு பிரயோஜனத்தையும்
உன்னை,Unnai - உன்னிடத்தில்
எக்காலத்திலும்,Ekkalathilum - ஒருநாளும்
யான் வேண்டேன்,Yaan venden - நான் விரும்பவே மாட்டேன்.