| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2882 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (எம்பெருமானோடு ஒரு க்ஷணகாலமாவது இப்போது சேரப் பெறுவானாயின் அது போதும் மறுபடியும் சேரவேணுமென்கிற விருப்பங்கூட எனக்கு உண்டாகாது என்கிறார்.) 8 | எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8 | நிக்கார்,Nikkaar - சிறந்தவர்களான வேதம் விமலர்,Vedham Vimalar - வேதம் வல்ல பரமைகாந்திகள் வழுங்கும்,Vazhungum - (அன்பு மிகுதியினால்) விழுங்குப்படியாகவுள்ள என் அக்காரக் கனியே,En akkaarak kaniye - அக்காரக் கனிபோன்ற எம்பெருமானே! எக்காலத்து,Ekkalathu - எப்போதும் எந்தை ஆய்,Endhai aay - எனக்கு ஸ்வாமியாகி என் உள்,En ul - எனது நெஞ்சிலே மண்ணில்,Mannil - பொருந்தி யெழுந்தருளியிருக்கப் பெறில் மற்று யாது ஒன்றும்,Matru yaadhu ondrum - வேறொரு பிரயோஜனத்தையும் உன்னை,Unnai - உன்னிடத்தில் எக்காலத்திலும்,Ekkalathilum - ஒருநாளும் யான் வேண்டேன்,Yaan venden - நான் விரும்பவே மாட்டேன். |