Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2883 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2883திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (தேவரீருக்கும் எனக்கும் ஸ்ம்பந்தம் அநாதிஸித்தமர்கவேயிருந்தும், அந்தோ! நெடுநாளாக அதனை மறந்து அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு அநுதபிக்கிறார்.) 9
யானே என்னை யறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9
வானே ஏத்தும்,Vaane etthum - விண்ணுலகம் முழுவதும் துதிக்குமாறு உள்ள
எம் வானவர் ஏறே,Em vaanavar aere - நித்யஸூரிநாதனான எம் பெருமானே!
யானே,Yaane - நான் தானே
என்னை,Ennai - என்னை
அறிய கிலாதே,Ariya kilaadhe - அறியமாட்டாமல்
யானே நீ,Yaane nee - யான் நீயே யென்னலாம்படி வேற்றுமையற்றிருப்பேன்;
யானே என் தனதே என்று இருந்தேன்,Yaane en thanadhe endru irundhaen - அஹங்கார மமகாரங்கள் கொண்டிருந்தேன்.
என் உடைமையும் நீயே,En udaimaiyum neeye - (இப்போது அவை தவிர்ந்து நான் அநுஸந்திக்கும் வகை யாதெனில்) எனது உடைமைகளும் நீயிட்ட வழக்காயிருக்கும் (என்பதே)