Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2884 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2884திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (கீழ்ப்பாட்டில் ஆழ்வார்தாம் கீழ்நாட்களில் இருந்த இருப்பைக்கூறி இழவுக்கு மிகவும் அநுபவித்து, இப்போது நல்லபடியாக இருக்கிற இருப்பையும் பேசினார்; அதுகேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்! இழந்தநாளைக்கு அநுதபிக்கின்ற உமக்கு, இனி இழவு நேர ப்ரஸக்தி யில்லையே; ஆகவே வாழ்ந்துவிட்டீரன்றோ? இனி நான் செய்ய வேண்டுவது ஒன்றுமில்லையே’ என்றருளிச் செய்ய, பிரானே! அப்படி ஸாதிக்கலாமோ? என்னை வைத்திருக்குமிடம் எதுவென்று ஆராயவேண்டாவோ? இந்ரிநலத்திலே இருக்கின்ற என்னுடைய சித்தஸ்திதியை நம்பலாகுமோ? என்னைத் திருவடிவாரத்தில் சேர்த்துக் கொண்டாலொழிய நான் நிர்ப்பரனாயிரக்க முடியாது’ என்கிற கருத்தை இப்பாசுரத்தில் வெளியிடுகிறார்,) 10
ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10
ஏழும்,Ezhum - ஏழு காளைகளையும்
வென்று,Vendru - வலியடக்கினவனாயும்
ஏர்கொள் இலங்கையை,Aerkol ilangaiyai - அடகு நிரம்பிய லங்காபுரியை
நீறு செய்த,Neeru seidha - நீறாக்கினவனாயுமுள்ள
நெடும் சுடர் சோதி,Netum sudar sothi - மஹா தேஜஸ்வியான பெருமானே!
என்னை தேறேல்,Ennai therael - என்னை நம்பவேண்டா!
உன் பொன் அடி,Un pon adi - உன்னுடைய திருவடிகளிலே
ஒல்லை,Ollai - விரைவாக
சேர்த்து,Serthu - (என்னைச்) சேர்த்துக் கொண்டு
வேறே போக,Verey poga - விஷயாந்தரங்களில் போகும்படி
எஞ்ஞான்றும;,Yennjaandrum; - ஒரு நாளும்
விடல்,Vidal - விடாதே.