Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2885 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2885திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (இத்திருவாய்மொழியை ஓதவே, இதுதானே புருஷார்த்தத்தைப் பெறுவிக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11
விடல் இல்,Vidal il - விடுதலில்லாத
சக்கரத்து,chakkarathu - திருவாழியையுடைய
அண்ணலை,Annalai - எம்பெருமானை
மேவல் விடல் இல்,Meval vidal il - பொருந்துவது ஒரு போதும் விடாமலிருக்கப் பெற்ற
வண்குருகூர்சொல்,Vangurukoor sol - சடகோபன் அருளிச் செய்த
கெடல் இல்,Kedal il - அழிவற்ற (நித்யமான)
ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரம் பாடலுள்ளும்
இவை பத்தும்,Ivai paththum - இப்பதிகம்
கிளர்வார்க்கு,Kilarvaarkku - தன்னை ஓதுமவர்களுக்கு
கெடல் இல் வீடு செய்யும்,Kedal il veedu seyyum - கெடுதல் ஒன்றுமில்லாத மோஷானந்தத்தைப் பண்ணிக் கொடுக்கும்.