| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2886 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ பன்னீராயிரப்படி –திருமலையில் காட்டிலும் அத்தோடு சேர்ந்த திருப்பதியை அனுபவிக்கையே பரம பிரயோஜனம் -என்கிறார்) 1 | கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1 | kilar oli,கிளர் ஒளி - மேன்மேலுங் கொழுந்து விட்டுக் கிளர்கின்ற ஞானவொளியையுடைய ilamai,இளமை - இளம்பிராயம் ketuvatan munnam,கெடுவதன் முன்னம் - அழிவதற்குள்ளே valar oli,வளர் ஒளி - குன்றாத தேஜஸ்ஸையுடையனான mayon,மாயோன் - எம்பெருமான் maruviya,மருவிய - நித்யஸந்நதானம் பண்ணியிருக்கிற kovil,கோவில் - ஆலயமாய் valar ilapolil cul,வளர் இளபொழில் சூழ் - வளர்கின்ற இளஞ்சோலைகளால் சூழப்பட்டதான maliruncolai,மாலிருஞ்சோலை - திருமாலிருஞ்சோலை மலையை talarvu ilar aki,தளர்வு இலர் ஆகி - தளர்ச்சி யில்லாதவராகி carvate,சார்வதே - அடைவதுதான் catir,சதிர் - ஸ்பரூபாநரூபம் |