Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2886 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2886திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ பன்னீராயிரப்படி –திருமலையில் காட்டிலும் அத்தோடு சேர்ந்த திருப்பதியை அனுபவிக்கையே பரம பிரயோஜனம் -என்கிறார்) 1
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1
kilar oli,கிளர் ஒளி - மேன்மேலுங் கொழுந்து விட்டுக் கிளர்கின்ற ஞானவொளியையுடைய
ilamai,இளமை - இளம்பிராயம்
ketuvatan munnam,கெடுவதன் முன்னம் - அழிவதற்குள்ளே
valar oli,வளர் ஒளி - குன்றாத தேஜஸ்ஸையுடையனான
mayon,மாயோன் - எம்பெருமான்
maruviya,மருவிய - நித்யஸந்நதானம் பண்ணியிருக்கிற
kovil,கோவில் - ஆலயமாய்
valar ilapolil cul,வளர் இளபொழில் சூழ் - வளர்கின்ற இளஞ்சோலைகளால் சூழப்பட்டதான
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமாலிருஞ்சோலை மலையை
talarvu ilar aki,தளர்வு இலர் ஆகி - தளர்ச்சி யில்லாதவராகி
carvate,சார்வதே - அடைவதுதான்
catir,சதிர் - ஸ்பரூபாநரூபம்