Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2887 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2887திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -திருமலை தான் வேணுமோ -அத்தோடு சேர்ந்த திருப்பதியை பரம பிரயோஜனம் என்கிறார்) 2
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2
catir,சதிர் - அழகு பொருந்திய
ila matavar,இள மடவார் - இளம் பருவத்துப்பெண்களிடத்து
talcciyai,தாழ்ச்சியை - ஆழய்காற்படுவதை
matiyatu,மதியாது - ஒரு பொருளாக நினையாமல்
atirkural cankattu,அதிர்குரல் சங்கத்து - முழங்குகின்ற ஓகையையுடைய சங்கு ஒலிக்கப்பெற்ற
alakar tam koyil,அழகர் தம் கோயில் - அழகருடைய ஆலயமாய்
mati taval kutumi,மதி தவழ் குடுமி - சந்திரன் உலாவப்பெற்ற சிகரத்தை யுடைத்தான
maliruncolai;,மாலிருஞ்சோலை; - மாலிருஞ் சோலையாகிற
pati atu,பதி அது - அந்தத் திருப்பதியை
etti,ஏத்தி - துதித்து
eluvate,எழுவதே - உய்வதே
payan,பயன் - புருஷார்த்தம்