| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2888 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலையைத் தொழவேணுமென்பதுகூட அவசியமன்று,திருமலையோடு ஸம்பந்தமுள்ள (அதன் அருகிலுள்ள) ஒரு மலையைத் தொழுதாலும் போதும், என்கிறது இப்பாட்டு.) 3 | பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில் மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3 | nence,நெஞ்சே - மனமே!, puyal malai vannar,புயல் மழை வண்ணர் - வர்ஷாகாலத்து மேகம் போன்ற திருநிறத்தையுடைய பெருமான் purintu,புரிந்து - விரும்பி urai,உறை - நித்யவாஸம் செய்கிற koyil,கோயில் - ஸந்நிதியாய், mayalmiku polil cul,மயல்மிகு பொழில் சூழ் - (கண்டவர்களை) மயக்குகிற சக்திமிகுந்த சோலைகளால் சூழப்பட்ட malirun colai,மாலிருஞ் சோலை - திருமாலிருஞ் சோலையினுடைய ayal,அயல் - அருகிலுள்ள malai,மலை - மலையை ataivatu atu,அடைவது அது - அடைவதும் கருமமே ஸ்ரீஉத்தேச்யந்தான் payan alla ceytu,பயன் அல்ல செய்து - நிஷ்பலமான காரியங்களைச் செய்வதனால் payan illai,பயன் இல்லை - லாபமில்லை |