திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2888 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2888திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலையைத் தொழவேணுமென்பதுகூட அவசியமன்று,திருமலையோடு ஸம்பந்தமுள்ள (அதன் அருகிலுள்ள) ஒரு மலையைத் தொழுதாலும் போதும், என்கிறது இப்பாட்டு.) 3
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில் மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3
பதவுரை Show / Hide
nence,நெஞ்சே - மனமே!,
puyal malai vannar,புயல் மழை வண்ணர் - வர்ஷாகாலத்து மேகம் போன்ற திருநிறத்தையுடைய பெருமான்
purintu,புரிந்து - விரும்பி
urai,உறை - நித்யவாஸம் செய்கிற
koyil,கோயில் - ஸந்நிதியாய்,
mayalmiku polil cul,மயல்மிகு பொழில் சூழ் - (கண்டவர்களை) மயக்குகிற சக்திமிகுந்த சோலைகளால் சூழப்பட்ட
malirun colai,மாலிருஞ் சோலை - திருமாலிருஞ் சோலையினுடைய
ayal,அயல் - அருகிலுள்ள
malai,மலை - மலையை
ataivatu atu,அடைவது அது - அடைவதும் கருமமே ஸ்ரீஉத்தேச்யந்தான்
payan alla ceytu,பயன் அல்ல செய்து - நிஷ்பலமான காரியங்களைச் செய்வதனால்
payan illai,பயன் இல்லை - லாபமில்லை