Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2889 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2889திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி-கர்ம பந்தத்தைப் போக்கி ஆஸ்ரிதர் ஆனவர்கள் அடிமை செய்து வாழ்கைக்கு ஈடாம் படி சர்வேஸ்வரன் வர்த்தித்து அருளுகிற திரு மலையை ஆஸ்ரயிக்கையே சத்ருசமான படி என்கிறார்) 4
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4
karumam,கருமம்‌ - கருமங்களாகிற
van pacam,வன்‌ பாசம்‌ - வலிய பாசங்களை
kalittu,கழித்து - கழற்றி
ulaniru,உழனீறு - அடிமை செய்து திரிந்து
uyyave,உய்யவே - உஜ்ஜீவிக்கும்‌ பொருட்டே
peru malai etuttan,பெரு மலை எடுத்தான்‌ - கோவர்த்தன உத்தாரணம்‌ செய்தருளியவனான எம்பெருமான்‌
pitu urai,பீடு உறை - தனது பெருமையெல்லாம்விளங்க நித்யவாஸம்‌ பண்ணுமிடமான
koyil,கோயில்‌ - ஸந்நிதியாய்‌
varu malai tavalum,வரு மழை தவழும்‌ - மழை பெய்ய வருகிற மேகங்கள்‌ தவழ்கின்ற
maliruncolai,மாலிருஞ்சோலை - மாலிருஞ்சோலை
tirumalai atuve,திருமலை அதுவே - எம்பெருமான்‌ ஸந்நிதி பண்ணியிருக்கிற திருமலையை
ataivatu,அடைவது - சேர்வது
tiram,திறம்‌ - உசிதம்‌