| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2889 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி-கர்ம பந்தத்தைப் போக்கி ஆஸ்ரிதர் ஆனவர்கள் அடிமை செய்து வாழ்கைக்கு ஈடாம் படி சர்வேஸ்வரன் வர்த்தித்து அருளுகிற திரு மலையை ஆஸ்ரயிக்கையே சத்ருசமான படி என்கிறார்) 4 | கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே பெருமலை எடுத்தான் பீடுறை கோயில் வருமழை தவழும் மாலிரும் சோலை திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4 | karumam,கருமம் - கருமங்களாகிற van pacam,வன் பாசம் - வலிய பாசங்களை kalittu,கழித்து - கழற்றி ulaniru,உழனீறு - அடிமை செய்து திரிந்து uyyave,உய்யவே - உஜ்ஜீவிக்கும் பொருட்டே peru malai etuttan,பெரு மலை எடுத்தான் - கோவர்த்தன உத்தாரணம் செய்தருளியவனான எம்பெருமான் pitu urai,பீடு உறை - தனது பெருமையெல்லாம்விளங்க நித்யவாஸம் பண்ணுமிடமான koyil,கோயில் - ஸந்நிதியாய் varu malai tavalum,வரு மழை தவழும் - மழை பெய்ய வருகிற மேகங்கள் தவழ்கின்ற maliruncolai,மாலிருஞ்சோலை - மாலிருஞ்சோலை tirumalai atuve,திருமலை அதுவே - எம்பெருமான் ஸந்நிதி பண்ணியிருக்கிற திருமலையை ataivatu,அடைவது - சேர்வது tiram,திறம் - உசிதம் |