திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2891 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2891திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலைக்குப் போகிற மார்க்கமுண்டே, அதனைச் சிந்திப்பது தானும் போது மென்கிறார்.) 6
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில் மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6
பதவுரை Show / Hide
kilmai ceyyate,கீழ்மை செய்யாதே - இழிவான செயல்களைச் செய்யாமல்
kiri ena,கிறி என - (இப்போது நான் சொல்லுகிறதை) நல்ல வுபாயமென்று நினையுங்கோள்
uri amar,உறி அமர் - உறிகளிலே அமைத்துவைத்த வெண்ணெயை
untavan,உண்டவன் - அமுது செய்த கண்ணபிரானுடைய
koyil,கோயில் - ஆலயமாய்
mariyotu pinaicer,மறியோடு பிணைசேர் - தம் குட்டிகளோடுகூட மான்பேடைகள் சேர்ந்து வாழப்பெற்ற
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலையினுடைய
neri,நெறி - வழியிலே
pata,பட - செல்லவேணுமென்கிற
atuve,அதுவே - அந்த நினைவு ஒன்றையே
ninaivatu,நினைவது - நினைப்பது
nalam,நலம் - நல்லது.