Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2892 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2892திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஆறாயிரப்படி- இதுவே ப்ராப்யம் என்று நினையுங்கள் -வேறு ஒன்றை ப்ராப்யமாக நினையாதே – நிலமுன மிடந்தான் என்றைக்கும் தனக்கு கோயிலாகக் கொண்ட பரம புருஷ நிர்மல ஞான ஜனகமான திருமலையை அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு வலம் செய்து மருவுங்கள்-இதுவே பரம ப்ராப்யம் -என்கிறார்) 7
நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7
narakaluntate,நரகழுந்தாதே - நரகத்தில் அழுந்த நினையாமல்
nalam enaninaimin,நலம் எனநினைமின் - (இவ்வுபதேசத்தை) நன்மை யென்று நெஞ்சிற் கொள்ளுங்கள்; (அதாவது)
munam,முனம் - முற்காலத்தில்
nilam,நிலம் - பூமியை
itantan,இடந்தான் - வராஹ ரூபியாகி இடந்தெடுத்துவந்த பெருமான்
koyil,கோயில் - நித்யவாஸம் பண்ணுகிற
ஸந்நிதியாய்,

malam aru mati cer,மலம் அறு மதி சேர் - களங்கமற்ற சந்திரன்
சேருமிடமான

malirun colai,மாலிருஞ் சோலை - திருமலையை
valam murai
eyti, வலம் முறை எய்தி
- அநுகூலமானமுறையிலே கிட்டி
maruvutale,மருவுதலே - பொருந்துவதே
valam,வலம் - உறுதியானது