| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2892 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஆறாயிரப்படி- இதுவே ப்ராப்யம் என்று நினையுங்கள் -வேறு ஒன்றை ப்ராப்யமாக நினையாதே – நிலமுன மிடந்தான் என்றைக்கும் தனக்கு கோயிலாகக் கொண்ட பரம புருஷ நிர்மல ஞான ஜனகமான திருமலையை அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு வலம் செய்து மருவுங்கள்-இதுவே பரம ப்ராப்யம் -என்கிறார்) 7 | நலமென நினைமின் நரகழுந்தாதே நிலமுன மிடந்தான் நீடுறை கோயில் மலமறு மதி சேர் மாலிரும் சோலை வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7 | narakaluntate,நரகழுந்தாதே - நரகத்தில் அழுந்த நினையாமல் nalam enaninaimin,நலம் எனநினைமின் - (இவ்வுபதேசத்தை) நன்மை யென்று நெஞ்சிற் கொள்ளுங்கள்; (அதாவது) munam,முனம் - முற்காலத்தில் nilam,நிலம் - பூமியை itantan,இடந்தான் - வராஹ ரூபியாகி இடந்தெடுத்துவந்த பெருமான் koyil,கோயில் - நித்யவாஸம் பண்ணுகிற ஸந்நிதியாய், malam aru mati cer,மலம் அறு மதி சேர் - களங்கமற்ற சந்திரன் சேருமிடமான malirun colai,மாலிருஞ் சோலை - திருமலையை valam murai eyti, வலம் முறை எய்தி - அநுகூலமானமுறையிலே கிட்டி maruvutale,மருவுதலே - பொருந்துவதே valam,வலம் - உறுதியானது |