| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2893 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருமலையைச் சென்று நிரந்தரமாக வலம் செய்கையே வழக்கு என்கிறார்) 8 | வலம் செய்து வைகல் வலம் கழியாதே வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8 | valam ceytu,வலம் செய்து - (சரணங்களுக்கு) வலிமை யுண்டாக்கிக் கொண்டு எப்போதும் vaikal,வைகல் - எப்போதும் valam kaliya,வலம் கழியா - அந்த வலிமையை வீணாகப் பாழ்படுத்தாமல் valam ceyyum,வலம் செய்யும் - (நமக்கு) நன்மையையே செய்தருளாநின்ற ayan,ஆயன் - கோபால கிருஷ்ணனான mayavan,மாயவன் - மாயவனுடைய koyil,கோயில் - கோயிலாகி vanor valam ceyyum,வானோர் வலம் செய்யும் - நித்ய ஸூரிகளும் வந்து பிரதக்ஷிணம் செய்யுமிடமான maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலை விஷயத்தில் valam ceytu,வலம் செய்து - பிரதக்ஷிணம் முதலிய அநுகூல வ்ருத்திகளைச்செய்து nalum,நாளும் - நாடோறும் maruvutal,மருவுதல் - பொருந்தியிருப்பது valakku,வழக்கு - யுக்தம் |