| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2894 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலையைத் தொழவேணுமென்கிற திண்ணிய அத்யவஸாயங் கொள்ளு மத்தனையே போதுமென்கிறார்.) 9 | வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில் மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9 | val vinai,வல் வினை - கொடிய பாவங்களிலே mulkatu,மூழ்காது - அழுந்தாமல் valakkena ninaimin,வழக்கென நினைமின் - (இவ்வுபதேசத்தை) நியாயமென்று கொள்ளுங்கள்; alam koti,அழம் கொடி - பேய்ச்சியாகிற pennai,பெண்ணை - பூதனையை attan,அட்டான் - முடித்தருளின பெருமான் amar,அமர் - எழுந்தருளியிருக்கிற peru koyil,பெரு கோயில் - பெரிய ஸந்நிதியாய் mala kaliru inam cer,மழ களிறு இனம் சேர் - இளமைதங்கிய யானைக் கூட்டங்கள் சேருகிற maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலையை tola karutuvatu,தொழ கருதுவது - வணங்க வேணுமென்று எண்ணுவதில் tunivate,துணிவதே - திடமான அத்யவஸாயங் கொள்வதே cutu,சூது - சிறந்த வுபாயம் |