| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2895 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –பல படிகளாலும் திருமலையே பரம ப்ராப்யம் என்று உபக்ரமித்த படியே உபசம்ஹரிக்கிறார்) 10 | சூதென்று களவும் சூதும் செய்யாதே வேத முன் விரித்தான் விரும்பிய கோயில் மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10 | cutu enru,சூது என்று - உபாயமென்றெண்ணி kalavum,களவும் - களவையும் cutum,சூதும் - சூதையும் ceyyate,செய்யாதே - செய்ய நினைக்காமல் mun,முன் - முற்காலத்தில் vetam,வேதம் - வேதங்களை virittan,விரித்தான் - (கீதை முதலியவற்றால்) விவரித்தருளின பெருமான் virumpiyakovil,விரும்பியகோவில் - விரும்பி யெழுந்தருளி யிருக்குமிடமான கோயிலாய் matu uru mayil cer,மாது உறு மயில் சேர் - பேடையோடு கூடின ஆண் மயில்கள் சேர்ந்து வாழப்பெற்ற maliruncolai,மாலிருஞ்சோலை - மாலிருஞ்சோலை யென்கிற potu avil malai,போது அவிழ் மலை - புஷ்பங்கள் விகஸிக்கிற திருமலையில் pukuvate,புகுவதே - சென்று சேர்வதே porul,பொருள் - புருஷார்த்தம் |