| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2896 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றாரை திரு வாய் மொழி தானே ஜென்மத்தை முடித்து அழகர் திருவடிகளில் சேர்க்கும் என்கிறார் ) 11 | பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன் தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11 | porul enru,பொருள் என்று - (ஒருநாளாகிலும்) பிரயோஜனப்படுமென்று i ulakam,இ உலகம் - இவ்வுலகங்களை pataittavan,படைத்தவன் - ஸ்ருஷ்டித்த பெருமானுடைய pukal mel,புகழ் மேல் - திருக்கல்யாண குணங்களில் marul il,மருள் இல் - அஜ்ஞான மில்லாத van kurukur van catakopan,வண் குருகூர் வண் சடகோபன் - வண் குருகூர் வண் சடகோபன் terul kolla,தெருள் கொள்ள - (சேதநர்க்குத்) தெளிந்த ஞானமுண்டாகுமாறு conna,சொன்ன - அருளிச் செய்த or ayirattul,ஓர் ஆயிரத்துள் - ஆயிரம் பாசுரங்களுள் ippattu,இப்பத்து - இப்பதிகம் mutittu,முடித்து - ஸம்ஸார பந்தத்தைப் போக்கி arul utaiyavan tal,அருள் உடையவன் தாள் - பரமதயாளுவான எம்பெருமானது திருவடிகளில் anaivikkum,அணைவிக்கும் - சேர்விக்கும் |