Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2896 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2896திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றாரை திரு வாய் மொழி தானே ஜென்மத்தை முடித்து அழகர் திருவடிகளில் சேர்க்கும் என்கிறார் ) 11
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11
porul enru,பொருள் என்று - (ஒருநாளாகிலும்) பிரயோஜனப்படுமென்று
i ulakam,இ உலகம் - இவ்வுலகங்களை
pataittavan,படைத்தவன் - ஸ்ருஷ்டித்த பெருமானுடைய
pukal mel,புகழ் மேல் - திருக்கல்யாண குணங்களில்
marul il,மருள் இல் - அஜ்ஞான மில்லாத
van kurukur van catakopan,வண் குருகூர் வண் சடகோபன் - வண் குருகூர் வண் சடகோபன்
terul kolla,தெருள் கொள்ள - (சேதநர்க்குத்) தெளிந்த ஞானமுண்டாகுமாறு
conna,சொன்ன - அருளிச் செய்த
or ayirattul,ஓர் ஆயிரத்துள் - ஆயிரம் பாசுரங்களுள்
ippattu,இப்பத்து - இப்பதிகம்
mutittu,முடித்து - ஸம்ஸார பந்தத்தைப் போக்கி
arul utaiyavan tal,அருள் உடையவன் தாள் - பரமதயாளுவான எம்பெருமானது திருவடிகளில்
anaivikkum,அணைவிக்கும் - சேர்விக்கும்