Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2897 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2897திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (திருமாலிருஞ்சோலையழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திவ்ய பூஷணங்களுக்குமுண்டான மிக்க பொருத்தத்தைக் கண்டு உள்குழைந்து பேசுகிறார். இவ்வடிவழகைக் கண்டவளவிலே தமக்கொரு ஸந்தேஹம் விளைந்தபடியை விண்ணப்பஞ் செய்து-, பிரானே! இந்த ஸந்தேஹந்தீர மறுமாற்றமருளிச் செய்யவேணுமென்கிறார்.) 1
முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1
திருமாலே,Thirumale - ச்ரியாபதியான எம்பெருமானே!
உனது முகம் சோதி,Unadhu mugam sodhi - உன்னுடைய திருமுகமண்டலத்தின் ஜ்யோதிஸ்ஸானது (உயர்முகமாகவளர்ந்து)
முடிசோதி ஆய்,Mudisodhi aay - திருவபிஷேக ஜ்யோதிஸ்ஸாய்
மலர்ந்ததுவோ,Malarnthadhuvo - விகஸிதமாயிற்றோ?
அடிசோதி,Adisodhi - திருவடிகளின் காந்தியானது
நீ நின்ற தாமரை ஆய் அலர்ந்ததுவோ,Nee nindra thaamaraai aay alarnthadhuvo - நீ யெழுந்தருளியிருக்கும் ஆஸன பத்மமாய்ப் பரவியதோ?
நின் பைம்பொன் கடி சோதி,Ninn paimpon kadi sodhi - உனது விசாலமாயும் ஸ்ப்ருஹணீயமாயு மிருக்கின்ற திருவரையின் காந்தியானது
படி சோதி ஆடையொடும் பல் கலன் ஆய்,Padi sodhi aadaiyodum pal kalan aay - இயற்கையான சோதியையுடைய பீதாம்பரமென்ன, பலவகைப்பட்ட ஆபரணங்களென்ன ஆகிய இவையாய்
கலந்ததுவோ,Kalanthadhuvo - வியாபதித்ததோ?
கட்டுரை,Katturai - தெரியவருளிச் செய்ய வேணும்.