| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2897 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (திருமாலிருஞ்சோலையழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திவ்ய பூஷணங்களுக்குமுண்டான மிக்க பொருத்தத்தைக் கண்டு உள்குழைந்து பேசுகிறார். இவ்வடிவழகைக் கண்டவளவிலே தமக்கொரு ஸந்தேஹம் விளைந்தபடியை விண்ணப்பஞ் செய்து-, பிரானே! இந்த ஸந்தேஹந்தீர மறுமாற்றமருளிச் செய்யவேணுமென்கிறார்.) 1 | முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1 | திருமாலே,Thirumale - ச்ரியாபதியான எம்பெருமானே! உனது முகம் சோதி,Unadhu mugam sodhi - உன்னுடைய திருமுகமண்டலத்தின் ஜ்யோதிஸ்ஸானது (உயர்முகமாகவளர்ந்து) முடிசோதி ஆய்,Mudisodhi aay - திருவபிஷேக ஜ்யோதிஸ்ஸாய் மலர்ந்ததுவோ,Malarnthadhuvo - விகஸிதமாயிற்றோ? அடிசோதி,Adisodhi - திருவடிகளின் காந்தியானது நீ நின்ற தாமரை ஆய் அலர்ந்ததுவோ,Nee nindra thaamaraai aay alarnthadhuvo - நீ யெழுந்தருளியிருக்கும் ஆஸன பத்மமாய்ப் பரவியதோ? நின் பைம்பொன் கடி சோதி,Ninn paimpon kadi sodhi - உனது விசாலமாயும் ஸ்ப்ருஹணீயமாயு மிருக்கின்ற திருவரையின் காந்தியானது படி சோதி ஆடையொடும் பல் கலன் ஆய்,Padi sodhi aadaiyodum pal kalan aay - இயற்கையான சோதியையுடைய பீதாம்பரமென்ன, பலவகைப்பட்ட ஆபரணங்களென்ன ஆகிய இவையாய் கலந்ததுவோ,Kalanthadhuvo - வியாபதித்ததோ? கட்டுரை,Katturai - தெரியவருளிச் செய்ய வேணும். |