Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2898 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2898திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (அழகருடைய வடிவழக்குக்கு ஒப்பாகக் போருவன இல்லாமையாலே அவ்வழகைப் பற்றி உலகத்தார் சொல்லும் துதிமொழிகள் நிறக்கேடாகவே தலைகட்டுமென்கிறார்.) 2
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2
பரம் சோதி,Param sodhi - பரஞ்சோதி யுருவனே!,
கட்டுரைக்கில்,Katturaikil - சொல்லப் புகுந்தால்
நின்கண் பாதம் கை,Ninkan paatham kai - உனது திருக்கண் திருவடி திருக்கைகளுக்கு
தாமரை,Thaamarai - தாமரைப்பூ
ஒவ்வா,Ovvaa - உவமையாகப் போராது;
சுட்டு உரைத்த நன் பொன்,Suttu uraitha nan pon - நெருப்பிலிட்டச் சுட்டு உரை கல்லில் உரைக்கப்படும் மாற்றுயர்ந்த பொன்னானது
உன் திருமேனி ஒளி ஒவ்வாது,Un thirumeni oli ovvaadhu - உனது திவ்யமான விக்ரஹ காந்திக்கு ஒப்பாகமாட்டாது;
இ உலகு,I ulagu - இவ்வுலகிலுள்ளோர்
ஒட்டு உரைத்து,Ottu uraithu - த்ருஷ்டாந்தம் சொல்லி
உன்னை புகழ்வு எல்லாம்,Unnai pugazhvu ellaam - உன்னைத் துதிப்பதெல்லாம்
பெரும்பாலும்,Perumbaalum - மிகவும்
பட்டுரை ஆய்,Patturai aay - நிரர்த்தக சப்தமாகி
புற்கென்றே காட்டும்,Purkenrae kaattum - அவத்யாவஹமாகவே தலைக்கட்டும்