Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2899 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2899திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (ஆழ்வீர்! உலகர் ஒட்டுரைத்துக் பேசுவதெல்லாம் எனக்கு நிறக்கோடாக முடிகின்றதே யன்றிப் புகழ்ச்சியாக ஆகின்றதில்லை யென்கிறீர்; *மயர்வற மதிநலமருளப் பெற்ற நீர் அழகாகப் பேசலாமன்றோ; எனக்கு நிறக்கோடாகாதபடிக்கு நீர் பேசலாமே என்ன; என்னாலுமாகாதென்கிறார்.) 3
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3
பரம் சோதி,Param sodhi - பரஞ்சோதியான பெருமானே!
நீ பரம் ஆய்,Nee param aay - நீயே ஸர்வோத் க்ருஷ்டனாயிருக்க
நின் இகழ்ந்து பின்,Ninn igazhndhu pin - உன்னைத்தவிர
மற்று ஓர் பரம் சோதி இன்மையின்,Martru or param sodhi inmai-yin - வேறொரு பரஞ்சுடர் இல்லாமையாலே
படி ஓவி நிகழ்கின்ற,Padi ovi nizhalkinra - உபமான மில்லாதபடி யிருக்கின்ற
பரம் சோதி நின்னுள்ளே,Param sodhi ninnullee - ‘பரம் ஜ்யோதிஸ்’ என்று உபநிஷத்துக்களில் ஒதப்பட்டுள்ள உன்னுடைய ஸங்கல்பத்துக்குள்ளே
படர் உலகம் படைத்த,Patar ulagam padaita - விசாலமான உலகங்களைப் படைத்த
எம் பரம் சோதி,Em param sodhi - எம்பரஞ்சுடருடம்பனே!
கோவிந்தா,Govindha - நீர்மைக்கு எல்லை யில்லாதவனே!
பண்பு,Panbu - உனது ஸ்வரூப ஸ்வபாவங்களை
உரைக்க மாட்டேன்,Uraikka mattean - வருணிக்க சக்தனல்லேன்.