| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2900 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (“கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே” என்றார் கீழ்ப்பாட்டில் அது, புத்திபூர்வமாகச் சொல்லமாட்டாமையைத் தெரிவித்தபடி. அழகருடைய அழகுதானே பேசுவிக்கப் பேசுகிறாரிதில்.) 4 | மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின் மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய் மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4 | மலர்தலை,Malar thalai - திருநாபிக்கமலாத்தைத் தலையிடமாகக் கொண்டு தோன்றிய இம் மா ஞாலம்,Im maa nyaalam - இப்பெரிய வுலகமானது நின் மாடு ஆய,Ninn maadu aay - உன்னுடைய ஸ்வரூபத்தைப் பற்றியதான மலர் புரையும் திரு உருவம்,Malar puraiyum thiru uruvam - பூப்போலழகிய திவ்யமான விக்ரஹத்திலே மனம் வைக்க மாட்டாதே ஆகிலும்,Manam vaikka maattaadhe aagilum - ஈடுபட முடியாதபடி யிருக்கச் செய்தேயும் மாட்டாத பல சமயம் மதி கொடுத்தாய்,Matadha pala samayam madhi koduthaai - (அதற்கு மேலே) தெளிவுக்குக் காரணமாகமாட்டாத பலவகைப்பட்ட பாஹ்யகுத்ருஷ்டிமத பிரசாரமும் பண்ணிவைத்து மோஹஜநகனுமானாய் (அவ்வளவுமல்லாமல்) மலர் துழாய் மாட்டே நீ மனம்வைத்தாய்,Malar thuzhaai maatte nee manam vaithaai - (இவ்வுலகத்தைத் திருத்திப் பணிகொள்ளும் வழியில் நோக்கம் செலுத்தாமல் திருத்துழாய் மலர் முதலி யஸ்வகீய போக்ய வஸ்துக்களின் அநுபவத்திலே நீ ஊன்றி யிருக்கின்றாய்; மா ஞாலம் வருந்தாதே,Maa gnalam varundhaadhe - (இப்படியாகில்) பெரிய இவ்வுலகம் இழந்தேபோகாதோ? |