Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2901 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2901திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (“ நாட்டாரிழவு பற்றிய கீழ்ப்பாட்டு ப்ரஸங்காத் ப்ரஸ்துதமத்தனை; மூன்றாம் பாட்டோடு இப்பாட்டிற்கு நேரே ஸங்கதி காண்க. “கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே” என்று சொல்லுவானேன்? நீர் ஸகல விலக்ஷணராகையாலே நம்மை நீர் பேசமாட்டீரோவென்று எம்பெருமான் திருவுள்ளமாக, எம்பெருமானே! என்னை நீ விலக்ஷணனாக்கி வைத்தாலும் உன் சுடர்ப் பொலிவை ஓர் எல்லையிலே நிறுத்தி வைத்தா யில்லையே; எங்ஙனே நான் பேசுவது; என்கிறார்.) 5
வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5
வருந்தாத,Varundhaadhe - ப்ரயந்த ஸரத்யமல்லாத ஸ்வாபாவிகமான
அரும் தவத்த,Arum thavatha - அருமையான தலத்தின் பலனாக வந்ததோ என்னலாம்படியான
மலர் கதிரின்,Malar kathirin - பாம்பின் கிரணங்களையுடைய
சுடர் உடம்பு ஆய்,Sudar utambu aay - தேஜோமய திவ்யமங்கள விந்ரஹயுக்தனாய்
வருந்தாத ஞானம் ஆய்,Varundhaadha gyaanam aay - ஸ்வாபாவிக ஜ்ஞான யுக்தனாய்
வரம்பு இன்றி,Varambu indri - எல்லையில்லாதபடி
முழுது இயன்றாய்,Muzhudhu iyanraai - எங்கும் வியாபித்திருப்பவனே!
வருங்காலம், நிகழ்காலம் கழிகாலம் ஆய்,Varungkaalam, nizhalkaalam kazhikaalam aay - எதிர்காலம் நிகழ்காலம் இறந்தகால மென்கிற மூன்று காலங்களுக்கும் நிர்வாஹகனாய்
உலகை,Ulagai - உலகங்களை
ஒருங்கு ஆக,Orungu aaga - ஒருபடிப்பட
அளிப்பாய்,Alippaay - ரக்ஷிக்குமவனே!
சீர்,Seer - (உன்னுடைய) திருக்குணங்களை
எங்கு,Engu - எங்கே
உலக்க,Ulakka - முடிய
ஓதுவன்,Oodhuvan - சொல்லுவோன்?